ரிஷி மதன் கையை பிடித்து இழுத்து அவன் தோளை மேல் கை போட்டு அழைத்து செல்ல...
மதன் : என்ன ரிஷி இப்ப நீ ரொம்ப happy ஹ இருப்பீயே... ஸ்ருதி உன்னையே ஏத்துக்கிட்டா... சுதீப்பும் happy இருப்பான்... ரெண்டு பேரும் மாமன் மச்சான் ஆகிட்டீங்க...
ரிஷி : அது இருக்கட்டும் Mr.மதன் விஸ்வநாதன்... ஏதோ தில்லு முல்லு நடக்குற மாதிரி இருக்கு... நீயும் சரண்யாவும் ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே... என்ன டா நடக்குது இங்க...
மதன் :"அய்யய்யோ பயபுள்ள மோப்பம் பிடிச்சுட்டானே..."என்று நினைத்துக் கொண்டு "Mr.ரிஷி தேவ் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... லூசு மாதிரி பேசாத டா..."என்று சொல்ல...
ரிஷி :"ஓய் என்ன உன் அண்ணா கிட்ட பேசி அவனை off பண்ற மாதிரி என்னைய off பண்ணலாம் நினேக்கிறீயா.."என்று மதன் காலரை பிடித்து இழுத்து "உண்மைய சொல்லு பக்கி.. என்ன நடந்துச்சு..."என்று கேட்க...
மதன் : ரிஷி பின்னாடி பாரு ஸ்ருதி...
ரிஷி மதனை விட்டுட்டு வேகமாக திரும்பி பார்க்க...
யாரும் இல்லாமல் போக... ரிஷி மதனை பார்க்க...மதன் வேகமாக ஓடி விட்டான்....
"டேய் டேய் மதன் டேய் நில்லு டா..."என்று ரிஷி கூப்பிட ஓடியே விட்டான்...
******************
ஆனந்தி குணா முகத்தையே பார்க்க...
குணா : ஏன் டி அப்படி பாக்குற... என்னைய sight அடிக்கிறீயா...நல்லா திருதிரு னு பாக்குற என்னைய... ஆனா பேச மாட்ற...
ஆனந்தி குணா பிடியில் இருந்து விலகி சென்று coffee எடுத்து அவன் கையில் கொடுக்க...
அதை வாங்கி அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து வாய் அருகே கொண்டு சென்று நிமிர்ந்து ஆனந்தியை பார்த்து " நீ குடிச்சிட்டியா..."என்று கேட்க...
ஆனந்தி "இல்லை.."என்பது போல் தலையை ஆட்ட...
குணா :"இதுக்கு கூட வாய திறந்து பேச மாட்டியா... நா எதுவும் தப்பு பண்ணிட்டேனா என்ன... என் கூட பேச மாட்டியா..."என்று கேட்கும் போதே சத்தம் வராமல் முகம் சுருங்கி வாடி போக...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்