அத்தியாயம் - 7

618 37 2
                                    

" என்னடா சொல்ற? அவ விருப்பத்துக்கும் நாம மதிப்பு கொடுக்க வேண்டாமா? கல்யாணம் வேண்டாமுன்னு நிக்குறவளை கட்டாயப்படுத்த முடியுமா?" என்று கேட்டார் விஜயேந்திரனின் தாயார்.

"அப்போ அவளை அப்படியே விட்டுடலாமா? அப்படியே ஔவையாரா போகட்டுமுன்னு நீங்க சொல்லுங்க, நான் ஒதுங்கிக்கிறேன்.  அப்பவும் நான் சிங்கிளாதான் இருப்பேன்.  அவளுக்கு கிடைக்காத எந்த வாழ்க்கையும் எனக்கும் வேண்டாம்.  இனி முடிவு உங்க கையில்.  கல்யாணத்துக்கு டேட் எல்லாம் பார்த்துட்டேன்.  அதுக்கான ஏற்பாட்டை கவனிக்க வழியை பாருங்க." என்று முடிவாக கூறிவிட்டு விஜயேந்திரன் சென்றுவிட 

"நான் என்ன செய்யட்டும்?" என்பது போல அவன் தாயார் உதிராவை பார்த்தார். உதிராவின் முகம் சோகத்தில் இருந்தது.  அவளுக்கு இக்கட்டான நேரத்தில் தன்னை காத்த உறவுகளே இப்போது சுமையாக தெரிந்தது. 

'ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கையா? அவளுக்கு என்று வேறு ஒரு பாதை இருக்க கூடாதா? கடைசி காலத்தில் என்னை பார்க்க யாரும் இல்லாவிட்டால் ஒரு முதியோர் இல்லம் கூட கிடைக்காமல் போய்விடுமா? அதற்கான பணத்தை கூட என்னால் ஈட்ட முடியாதா? என்னவோ என்னை காக்க வந்த பரந்தாமன் மாதிரியே பேசிட்டு இருக்கான்.  சும்மா சும்மா மருந்து தருகிறேன் என்று முத்தத்தை வாரி இறைத்தவனே என் பேச்சை கேட்டுகிட்டு சிவனேன்னு எங்கேயோ ஒரு திசையில் சத்தம் இல்லாமல் இருக்கிறான்.  இவனுக்கு என்ன வந்தது?' என்று மனதிற்குள் நினைத்தவள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினாள். 

இவளிடமும், தன் தாயாரிடமும் தன் முடிவை உறுதியாக சொல்லிவிட்டு போன விஜயேந்திரன் தன் அறைக்குள் சென்றவுடன் கதவை மூடிக்கொண்டு தன் உள்ளங்கையை மடக்கி சுவற்றில் குத்தினான் கை வலிக்க வலிக்க.  எதற்காக இத்தனை வேகம், வேதனை என்று அவன் ஆராயவில்லை.  என்ன தப்பு செய்திருந்தாலும் ஒரு பெண்ணை இந்த கையால் அடித்துவிட்டேனே என்று மட்டும்தான் நினைத்தான்.  அவள் செய்த தவறை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உதிரா இவனின் இரத்த சொந்தம்.  ஆனால் அதற்காக அவளுக்கு இவன் கொடுத்த தண்டனையையும் இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அது எதனால் என்றால், சும்மா கூட அவளுக்காக இவன் இதயத்தில் ஒரு சிறு கரிசனையை வளர விடக்கூடாது என்று இவன் உறுதியாக இருந்தான்.  அதனால் தான் இந்த குத்து.  தன் முடிவை மீறி மனம் அவளுக்காக இரக்கம் கொண்டதால் வந்த கோபம் இப்படி வெளிப்பட்டது. 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now