அத்தியாயம் - 31

591 34 3
                                    

இன்றோடு ஏஜே தாய் வீட்டுக்கு சென்று ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்துவிட்டாள் இருக்கிற எல்லோரையும் கதற வைத்துவிட்டு. அலறி அலறி ஹாஸ்பிடலை அவள் அலற வைக்க போலீஸ்காரன் வந்து ஒரே அதட்டலில் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அந்த வெறியில் அலறாமலேயே அவள் குழந்தையை பெற்று எடுத்துவிட்டாள். இவன் மேல் கோபம் வந்தால் அவள் எதையும் செய்வாள் மிக எளிதாக.

குழந்தை பிறந்துவிட்டதாக நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போகவும் இவன் உள்ளே சென்றான். குழந்தையை பார்த்தவன் இவனிடம் முகத்தை திருப்பிக்கொண்டு படுத்திருப்பவள் அருகில் சென்று அவள் நெற்றியில் வலுக்கட்டாயமாக ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு குழந்தையை எடுத்து கொஞ்சினான்.

"இந்த கருவாயனுக்கு சும்மாவே என்னை கண்ணு தெரியாது. இதுல இவனுக்கு ஒரு பெண் குழந்தை வேற. இனி எப்படி என்னை எட்டிப்பார்ப்பான்?" என்று கொஞ்சமும் நியாயம் இல்லாமல் அவன் மேல் குற்றம் சுமத்தினாள் அவள். தினம் நாள் தவறாமல் இவளை மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்து வந்தவனை இந்த மாதிரி குற்றம் கூற அவளால் மட்டுமே முடியும்.

இவளை பார்த்துவிட்டு மட்டுமா வந்தான். அவள் தூங்கும் வரை அவளுடனே இருந்துவிட்டு, வீட்டுக்கு வந்தும் போனில் பேசிவிட்டு அவள் ஆசைப்பட எல்லாவற்றையும் வாங்கி கொடுத்தும் இருந்தவனை இந்த மாதிரி சொல்ல முடிகிறதே! அவளுக்கு இப்படி குற்றம் கூற வாய் வர காரணமும் இவன்தான். 'நான் வராட்டி உன் புலப்பலை யார் கேட்பது? எனக்கு என்ன பிடித்தா வருகிறேன்?' என்று தன் சொந்த வாயாலேயே சூனியம் வைத்துக்கொள்வான் இவன்.

உதிராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவளை அவள் வீட்டுக்கு அனுப்பிவிட்டே இவளை இங்கே அழைத்து வந்தார் சுமித்ரா.

"போலீஸ்க்கார் என் குழந்தை, என் குழந்தைன்னு ஆடிட்டு இருந்திருங்க. இந்தா இருக்கு உங்க குழந்தை. இனி என்னை யாரும் தொந்திரவு பண்ண கூடாது. நான் படிக்க போறேன். இப்போதான் எனக்கு படிப்பு அருமை தெரிந்திருக்கிறது. நான் ஒரு வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்தால் என்னை இப்படி பார்ப்பிங்களா? இந்தாங்க உங்க பொண்ணு. இனி எங்கிட்ட யாரும் எந்த வேலையும் சொல்ல கூடாது." என்று தனது குழந்தையை இவனிடம் கொடுத்துவிட்டு பழையப்படி இவள் கேமிராவை எடுத்துவிட்டாள்.

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Wo Geschichten leben. Entdecke jetzt