அத்தியாயம் - 20

590 39 0
                                    

எதிர்காலம் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல் நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை நம்பி 'நாமும் நல்லா வருவோம்' என்ற எண்ணத்தில் அந்த கல்லூரியில் ஆண்களும், பெண்களும் சிறகு இல்லாத பட்டாம்பூச்சியாக சிறகடித்துக்கொண்டு, அவர்களை சுழன்று அடிக்கும் சுனாமிக்கும் டேக்கா கொடுத்து சுனாமிலேயே சும்மிங் செய்வோம் என்று கெத்தாக சுத்திக்கொண்டிருந்தார்கள். 

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஹே ரகிட ரகிட ரகிடஊ
ரகிட ரகிட ரகிடஊ
ரகிட ரகிட ரகிடஊ
ரகிட ரகிட ரகிடஊ

என்று பாடிக்கொண்டே ஏஜேவின் தோளில் ஒருத்தன் இடித்துவிட்டு போக 

"போய் தொலையேண்டா பக்கி பயலே! எனக்கு இருக்கிற கோபத்தில் உனக்கு உசுரு இல்லாமல் போயிடும்.  ரகிட ரகிட ரகிடன்னு பைத்தியம் மாதிரி துள்ளிட்டு இருக்கிற அந்த காலை முட்டுக்கு கீழே வெட்டிடுவேன்.  போடா" என்று ஏஜே யார் மேலேயோ இருக்கிற கோபத்தை சந்தோசமாக பாட்டுப்பாடிக்கொண்டு போன ஒருத்தன் மேல் இறக்க 

"ஏய் என்ன ரொம்ப பேசுற! நான் போலீஸ்க்காரன் பொண்டாட்டின்னு போஸ்டர் அடிக்காத குறையாக பந்தா உட்டுட்டு திரிஞ்ச.  இப்போ அவன் உன்னை விட்டுட்டு போயிட்டான்னு தலைப்பு செய்தி போயிட்டு இருக்கு.  இதுக்குத்தான் முத்தி போன முருங்கக்காய் பின்னாடி போகாதேன்னு அவ்வளவு சொன்னோம்.  ஒரு அறிவாளி சொல்றானேன்னு கேட்காம அவன் பின்னாடி போய் இப்படி பல்பு வாங்கிட்டு நிக்குற.  இப்போ கூட ஒன்னும் லேட் இல்ல.  நீ மட்டும் ஊன்னு ஒரு வார்த்தை சொல்லு.  உன்னை ரோஜா இதழ் மேலே நடக்க வச்சு, பாலில் மிதக்க வைக்கிறேன்." என்று அவன் தள்ளி போய் நின்றுக்கொண்டு சத்தமாக இவளை பங்கம் செய்துக்கொண்டு இருந்தான்.  

"ஏதாச்சும் ஜூஸ் கடையில் இருந்து வரியா என்ன? பேசுறதை கொஞ்சம் பக்கத்தில் வந்து பேசு பார்ப்போம்.  முன்னே இருக்கிற அந்த இரண்டு பல்லும் தெறிச்சிடும்.  ஓடி போயிடு." என்று ஏஜே  அவனை விரட்ட போக 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now