விடாமல் துரத்துராளே 34

1.6K 64 28
                                    

விடாமல் துரத்துராளே 34

வானம் முழுவதும் கண் மை பூசியது போன்று இருள் படர்ந்து இருந்த இரவு வேளை தேவா டைனிங் டேபிளில் ஹோட்டலில் ஆர்டர் செய்து இருந்த உணவு வகைகளை அடுக்கி வைத்தபடி பாப்பா வா சாப்டு வந்திருச்சு பாப்பா சீக்கிரம் வா என தியா வை சாப்பிட அழைக்க,

அறைக்குள் இருந்து கோவமாக வந்தவள் தேவா முன்பு வந்து  எத்தனை தடவை சொல்றது பாவா என்னை பாப்பான்னு கூப்டாதீங்கன்னு இடுப்பில் கை வைத்த வண்ணம் முறைத்தபடி கேட்டாள்.

பாப்பான்னு தான் கூப்டுவேன்னு நானும் எத்தனை தடவை சொல்றது பாப்பா.

ப்ளீஸ் பாவா என் பேர் சொல்லி கூப்டுங்க என தியா சிணுங்க.

என்ன பேர் அது திரவியா வியாதியான்னு அந்த பேர் உனக்கு நல்லாவே இல்லை. பாப்பாங்கிறது தான் உனக்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கு பாப்பா என எப்போதும் போல தியா வை வம்பு இழுத்தான். அவனுக்கு அவளை வம்பு இழுப்பது மிகவும் பிடித்து இருந்தது.

உங்களை என அவள் ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் பாப்பா இப்புடி வள வளன்னு பேசிட்டே இருந்த சாப்பாடு ஆறிரும் உக்கார்ந்து சாப்டு என அவளை நாற்காலியில் அமர வைத்தவன் அவள் தனக்கு வேணும் என்று கேட்ட சிக்கன் ப்ரைடு ரைஸ், செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ், ஐஸ்க்ரீம் என் அனைத்தையும் அவள் புறம் நகர்த்தி விட்டு தானும் அமர்ந்தான்.

பாவா உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணுனீங்க.

எனக்கு நாண், பன்னீர் பட்டர் மசாலா, சாக்லேட் ஐஸ்கிரீம்.

ஏன் நான்வெஜ் வாங்கல. இந்தாங்க இதை நாமா ஷேர் பண்ணிக்கலாம் எடுத்துக்கோங்க.

எனக்கு இது போதும்  நீ சாப்டு  பாப்பா என்று தேவா கூற, சரி ஒரே ஒரு  வாய் மட்டும் என்றவள் கையில் சாதத்தை எடுத்து அவன் புறம் நீட்ட தேவாவும் சாதத்தை வாங்க கை நீட்டினான்.. அதில் ஒரு அடி போட்டவள், அவளே ஊட்டி விட்டாள்.. வெகு நாட்களுக்கு பிறகு அவனுக்கு ஒருவர் பாசமாக ஊட்டி விடுவதால் லேசாக கலங்கி விட்டான். அடுத்தும் அவன் ஆவென காட்ட தியா ஊட்ட ஆரம்பித்தாள்.

விடாமல் துரத்துராளே!!Donde viven las historias. Descúbrelo ahora