விடாமல் துரத்துராளே 44

898 31 10
                                    


பாகம் 44

தன்னருகே தன்னை அணைத்தபடி படுத்திருந்த தேவாவை பார்த்த தியா லாக் பண்ண ரூம்க்குள்ள இவர் எப்புடி வந்தாரு என்று யோசிக்க அப்போது தான் நியாபகம் வந்தது  அந்த அறைக்கு இன்னோரு கதவு இருப்பது, அதை லாக் செய்யாத தன்னையே கடிந்து கொண்டவள் கோவமாக தேவா புறம் திரும்பினாள்.. கண்களை மூடி இருந்தான். இருவரின் முகமும் மிக நெருக்கமாக இருந்தது.. பேச ஆரம்பித்தாள் இதழ்கள் நான்கும் உரசி கொள்ளும் அளவு அவ்வளவு நெருக்கமாக அவளை அணைத்து இருந்தான் தேவா…

திரும்பி பழையபடி படுத்தவள் கோவமாக தன் வயிற்றின் மீது இருந்த தேவா கையை பிடித்து அகற்ற முயன்றாள்.. ஆனால் தியாவின் மென் கரத்தால் அவனின் வலிய கரத்தை அகற்ற முடியவில்லை.. இருந்தும் மீண்டும்  அவன் கையில் கிள்ளி வைத்து அடித்தும் பார்த்தாள் ஆனால் அவனின் கையை அசைக்க கூட முடியவில்லை..

"பாப்பா சாரி" என்றான் அவள் காதருகே கண்களை மூடியபடி, கணவன் கூறிய ஒற்றை சாரியில்லே உருகிய மனதை இழுத்து பிடித்தவள் கோவமாக, "உங்க சாரி எல்லாம் தேவையில்லை, என் மேல்ல இருந்து கையை எடுங்க   நான் தான் தப்பான பொண்ணாச்சே, அலைஞ்சான் கேஸ்ல, என்னை எதுக்கு" என்று பேசி கொண்டே போனவள் வாய் மீது ஒரு அடி போட்ட தேவா,

"ம்பச் பாப்பா நான் தான் சாரி சொன்னேன்ல.. நேத்து வேற ஒரு பயங்கர டென்சன் அந்த நேரத்தில்ல நீ விளையாடவும் கோவத்தில்ல பேசிட்டேன் என்றதும் தேவா கையை தட்டி விட்டு  எழுந்து அமர்ந்தவள்,

"ஒன்னும் வேணாம் இங்க இருந்து போங்க.. நான் உங்க விளக்கம் எதையும் கேட்க தயாரில்லை.. போக வேற இடம் இல்லை அதான் திரும்பி இங்கேயே வந்துட்டேன்.. நேத்து என்ன எல்லாம் பேசுனீங்க.. எவ்ளோ அடிச்சு துரத்துனாலும் நாய்க்குட்டி மாதிரி உங்களையே சுத்தி வரதால்ல, உங்களுக்கு நான் சீப் தான் தெரிவேன்" என்றவள் கண்களும் கூட கலங்க ஆரம்பித்து இருந்தது..


விடாமல் துரத்துராளே!!Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin