தான் எடுக்கப்போகும் முதல் வகுப்பிற்கு தேவையான நோட்ஸை எடுத்துகொண்டிருந்த மலர் "ஹாய்..."என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவுடன் கண்டது கிட்டதட்ட முகிலனின் மடியில் அமர்திருந்த அந்த அல்ட்ராமாரட்ன் பெண்ணை.மனதை வாள் கொண்டு அறுத்ததுபோல வேதனை அடைந்தவள் வேகமாக தனது உடமையை எடுக்க மீண்டும் அவளது காதில் விழுந்த வார்தை "ஈவனிங் மீட் பண்ணலாம் டார்லிங்"என்பதே
வேதனையில் கண்கள் மூடி வெளியேர போகும் நேரம்."வதூ.... "என்ற முகிலனின் குரல் கேட்டு அவளது கால்கள் அசைய மறுத்தது ,வேகமாக திரும்பியவள் தனது கையை விடுவித்து அவனை முறைத்தாள்.
தவறு செய்த மாணவன் போல தலை யை குனிந்து நின்றான் அந்த கல்லூரியின் கம்பீரமான ஹெ.ஓ.டி கார்முகிலன்.
"யாரது?" ஒற்றைச்சொல்லில் கேள்விகேட்டாள் மலர்.
"ரியா....." தயக்கத்துடன் பதிலலித்தான் முகிலன்.
"ரியா னா? " இம்முறை மலரின் குரலில் லேசாக கோபம் எட்டிப்பார்த்தது.
"சான்ட்ரியா( sandriya)," என்று கூறுகையிலேயே அவனை இடைமறித்த மலர்,"ஓஓஓ ..........செல்ல பேரெல்லாம் கூட வச்சாச்சா?" என்று நக்கலாக கேட்டாள்.
"இல்ல வது எல்லாரும் அப்படி தான் கூப்புடுவாங்க," தன் பேச்சின் விளக்கத்தை கூற முயற்ச்சித்தான் முகிலன்.
"சரி அவளுக்கு உங்ககிட்ட என்ன வேலை?"
"அது வந்து .............,"
"வந்து ?ஏன் இழுக்குறீங்க?"என்று இடையிட்ட மலரைசெல்லமாக மனதிற்குள் திட்டிவிட்டு (பேச விட்றாளா பாரு)
இல்லை அவளுக்கு என்ன புடிக்கும்." என்று ஒருவாறு கூறி முடித்தான்." ஓஹோ .........?"
"ஆனா எனக்கு அவள புடிக்காதுடா நெஜம்மா டா.
நம்பு டா நான் அவள அவாய்ட் தான் பண்ணுவேன்,"மலரிடமிருந்து பதில் இல்லை, அவளது முகம் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் இருந்தது.
இருந்தும் அவளை அழைத்துக்கொண்டேயிருந்தான் முகிலன்," வது,வதூ..., வது குட்டி........"
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.