அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க கைகள் இரண்டும் நாற்காலியில் முரட்டு கயிரால் பிணைக்கப்பட்டிருக்க வாயில் ப்ளாஸ்டர் ஒட்டி மயக்கத்தில் இருந்த மலரை நோக்கி ஒரு ஜோடி கால்கள் நகர்ந்து வந்தன.
மயங்கிய நிலையில் இருந்த மலரின் அழகிய முகம் அவனை வசீகரித்தது. அவன் மனதினுள் உறங்கிக்கொண்டிருந்த மிருகம் மெல்ல எட்டிப்பார்தது.
அந்த மிருகத்தின் அடுத்த செயலை தடுப்பதுபோலவே அவன் மொபைல் அலற , வெறுப்புடன் அதை வெளியே எடுத்தவன் பயத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி வேறு அறைக்குள் நுழைந்தான்.
அந்த பக்கம் ஒரு குரல் கர்ஜித்தது," டேய் சொன்னது மாதிரி வேலையை முடிச்சிட்டியா?"
" ஐயா நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேங்க ஐயா?"
"சரியான பொண்ண தானே தூக்குன?"
"ஆமாங்கய்யா நீங்க சொன்ன மாதிரியே தான் அவங்க இருந்தாங்க. குரு வோட கார் ல வீட்டுக்குள்ள போனாங்க, கொஞ்ச நேரத்துல தனியா நடந்து வெளியே வந்தாங்க, அவங்கள அங்க இருந்து கடத்திட்டு வந்துட்டேன்."
"என்னடா சொல்ற? நான் சொன்ன மாதிரியா, அப்ப நீ நான் அனுப்புன ஃபோடோவ பார்கலை யா? "
" எனக்கு எந்த ஃபோடோவும் வரலையே ஐயா?"
" நீ சொல்றத வெச்சு பார்த்தா, வேற யாரையோ தூக்கிட்டு வந்திருக்க னு நினைக்கிறேன். இரு நான் அவங்க வீட்ல என்ன நிலைமை னு கேட்டு சொல்றேன்."
" சரிங்க ஐயா."
"டேய் ஞாபகம் இருக்கட்டும். அந்த பொண்ணு மேல உன் விரல் நுனி பட்டாலும் தோலை உரிச்சு தோரணம் கட்டிருவேன்."
"சரிங்க ஐயா, அப்படிலாம் செய்ய மாட்டேங்க ஐயா "
அவன் தன்னுடைய மொபைலை ஆப் பண்ணிவிட்டு திரும்பி தன் சகாவிடம் "டேய் யாரும் வராம பார்த்துக்க நான் கொஞ்சம் வெளிய போய்டு வந்தர்றேன்"
என்று கூறிவிட்டு அந்த பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தான்.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.