Episode 19

6.4K 326 123
                                    

குருவின் இந்த செயலை அங்கு இருந்த யாரும்  எதிர்பார்காததால் அனைவரும் அதிர்ந்தனர்.

ஆனால் அதைபற்றி கவலை கொள்ளாமல் ஏன் சிறிது கூட வருத்தப்படாமல் மிக கம்பீரமாக எழுந்து தன் மனைவியை நோக்கிய குரு அழகாக புன்னகைத்து,"  மலர் இப்ப   நீ எங்கூட வரத யாராலும் தடுக்க முடியாது." என்று கூறினான்.

மலரின் முகத்தில் அமைதியும் சந்தோஷமும் கலந்து இருந்தது.

"ஒரு மஞ்சள் கயித்தை கழுத்துல கட்டிடா அவளை உங்கூட அனுப்ப நான் சம்மதிச்சுருவேனா?இது என்னோட கோட்டை என்னை மீறி எதுவும் நடக்காது,இதோ இங்க நிக்குறாறே மிஸ்டர். பிரபாகரன் இவர்தான் என் மாப்பிள்ளை. இத யாராலயும் மாத்த முடியாது.அது மட்டும் இல்லை முதல்ல உன்னால  இங்க இருந்து வெளியே போக முடியுதானு பாரு அப்பறமா என் மகள கூட்டிட்டு போறத பத்தி யோசிக்கலாம்."
ஆக்ரோஷமாக தொடங்கி நக்கலாக முடித்தார் ராமநாதன்.

அவர் கூறியவற்றை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த குரு சத்தமாக சிரித்தான்.அங்கு இருந்த அனைவரும் அவன் சிரிப்பதை புரியாமலும்,ஆச்சரியமாக பார்தனர்,ஆனால் அவனை பற்றி நன்கு தெரிந்த மலரோ புன்னகை மாறாத முகத்துடன் அவனை காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

குரு,"இத்தனை பேரு முன்னாடி வச்சு உங்க பொண்ணு கழுத்துல  தாலி கட்டுன எனக்கு இங்க இருந்து என் மனைவிய கூட்டிட்டு போக தெரியாதா என்ன? மலர் வாடா நாம போலாம்."

"டேய் வேண்டாம் என்னோட பவர் தெரியாம என் கூட விளையாடாத, இந்த  ஹாஸ்பிட்டல சுத்தி என்னோட ஆளுங்க நிக்கறாங்க நீ அவ்வளவு சுலபமா இங்க இருந்து போக முடியாது."

பேசிக்கொண்டிருக்கும் போதே 10 பேர் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தனர் அவரை தொடர்ந்து வந்த மனிதரை பார்த்த அனைவரும் சிலையாக உறைந்து நின்றனர்.

ராமநாதனின் மனமோ,"இவரு எதுக்கு இங்க வந்துருக்காரு ,ஐய்யோ நம்மை இவருக்கு வேண்டியவங்க யாரையாவது ஏதாவது செஞ்சுடோமா" என சிந்தித்தது.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now