Episode 33

6.2K 239 89
                                    

குருவின் உறுதியான நிலை கண்டு தடுமாறிய மலர்.சில நொடிகளில் தன்னை சமாளித்துக்கொண்டு நேர் பார்வையுடன் குருவை நோங்கி்," நான் எங்க வீட்டுக்கு போறேன் குரு, நீங்க என்னை விரும்புனது உண்மையா இருந்தா என்னோட தன்மானதிற்க்கு மதிப்பு கொடுக்குறவரா இருந்தா என்னை தடுக்காதீங்க.இல்லை நான் உன் கூடத்தான் வருவேன் அப்படீனு நீங்க சொன்னீங்கனா உங்களுக்கு உங்க காதல் மட்டும் தான் முக்கியம் என்னோட மனச பத்தி எந்த வித கவலையும் இல்லை னு நினைச்சு உங்கோட முடிவுக்கு நான் கட்டுபடறேன்."என்று தீர்கமாக தன் முடிவை உறுதியுடன் கூறினாள்.

மலரின் முடிவை கேட்டு திடுக்கிட்ட குரு தான் கையாளாகாத நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக உணர்ந்து இயலாமையுடன் தன் தந்தையை நோக்கினான்.

அதுவரை அங்கே நிகழ்ந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த குருவின் தந்தை பூபதி தன் மௌன நிலையை கலைத்தார்," மலர்வதனி ,என் மனைவி பேசுனதை நான் சரி னு சொல்ல மாட்டேன், இது முகிலனோட வாழ்க்கை அவனுக்காக நான் பேச கூடாது அதுனால தான் அமைதியா இருந்தேன்.மலர் உன்னோட ஆதங்கம் சரிதான் ஆனால் அதுக்காக நீ வீட்டை விட்டு போகனும் னு எடுக்குற முடிவு தப்பானது.எந்த பிரச்சனை வந்தாலும் நம்ம மேல தப்பு இல்லைனா எதிர்த்து நின்னு துணிச்சலோட செயல்படனும் அதை விட்டுவிட்டு  எல்லாதுக்கும் இப்படி வீட்டை விட்டு வெளிய போறது தீர்வாகாது. இது என்னோட கண்ணோட்டம் இதுக்கு மேல என்ன செய்யனும் னு நீங்க ரெண்டு பேரும் தான் முடிவெடுக்கனும்." என்று மிகவும் ஞாயமான முறையில் தன் கருத்தை தெரிவித்துவிட்டு அந்த இருவருக்கும் சிறு தனிமை கொடுத்து விலகி சென்றார் பூபதி.

தனியே விடப்பட்ட கணவனும் மனைவியையும் அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.அதற்கு நேர் எதிராக அவர்களின் மனதிற்குள் பெரும் போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது.

மௌனத்தை முதலில் கலைத்த குரு," வதூ............. அப்ப நீ என்னை பிரியுறது னு முடிவு பண்ணிட்டியா?" குரலில் வருத்தமும் இயலாமையும் ஒருசேர கேட்டான்.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon