தன் மணம் கவர்ந்தவளை சந்தோஷத்துடன் தன் இல்லத்திற்கு அழைத்து சென்ற குரு , தன் தாயாரின் இச்செயலை சிறிதும் எதிர்பார்காததால், ஒரு நிமிடம் தன்னுடைய நிலையில் இருந்து தடுமாறினான் , அந்த தடுமாற்றம் அவனின் திருமணம் குறித்து அல்ல தன்னுடைய தாயின் இந்த எதிர்பாராத செயலினால்.
ஆனால் தன்னுடைய தந்தையினால் புண்பட்டிருந்த மலரின் நெஞ்சம் ,சரியாக யோசிக்கும் திறனை இழந்து குருவின் அமைதிக்கு தவறான காரணத்தை யூகித்தது.
நடந்தவற்றை மாற்ற இயலாது ஆனால் நடந்த தவறிற்கு இருவரையும் குற்றம் சொல்ல இயலாது.
தன் சிறு வயது முதல் அன்பின் மறுபதிப்பாய் ,மாமியாரின் பாசமிகு மகளாய், தன் தந்தை யின் மணமறிந்து நடக்கும் மனைவியாய் ,தன்னிடம் வேலை செய்பவரின் மணம் புண்பட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கும் தன் அன்னை, இன்று தன்னுடைய மனைவி யை ஏற்றுக்கொள்ளாமலும், வீட்டினுள்ளே அனுமதிக்காமலும் அவமதித்ததை நினைத்து அவன் மூளை ஒரு நிமிடம் செயலிலந்தது.
அந்த ஒரு நிமிடத்தினால் தன்னவளை இழக்க நேரிடும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை குரு மிகவும் கவனமாக இருந்நிருக்க கூடும்.
தன் அருகே மலரை காணாமல் தன் தாய் மீது கோபம் கொண்டு மலரை தேடி ஓடினான் சில நொடிகளிளே வாசலை அடைந்த குரு எங்கும் மலரை காணாமல் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் வினவினான்.
" சின்னய்யா அவங்க வெளிய நடந்து வந்தாங்க , அவங்க வர்றத பார்த்து நான்தான் கதவை திறந்து விட்டேன். நம்ம வீட்ட விட்டு வெளியே போனகும் வேகமா ஒரு வண்டி வந்துச்சு , அவங்க அதில ஏறி போய்டாங்க." என்று கூறிய செக்யூரிட்டியை நம்பாத பார்வை பார்த்த குரு.
" நல்லா யோசிச்சு சொல்லுங்க அவங்களா அந்த வண்டில ஏறி போனாங்களா? இல்லை அவங்கள கட்டாய படுத்தி கூட்டிட்டு போனாங்களா?" என்று தன் சந்தேகத்தை வினவினான்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த அந்த நபர்," அவங்க எங்கயோ வெறிச்சு பார்த்துக்கிட்டே நடந்து வந்தாங்க, நான் அவங்ககிட்ட பேசுனதுக்கு கூட அவங்க பதில் சொல்லல, அப்பதான் அவங்க கவனிக்காம போறாங்க னு நானும் பின்னாடி யே கூப்டுக்கிட்டே போனேன். அப்ப ஒரு கருப்பு கலர் வண்டி வந்துச்சு அதில இருந்த ஒருத்தர் இவங்க கைய புடிச்சு உள்ள இழுத்தாரு ,அப்பறம் அந்த வண்டி வேகமா போயிடுச்சு." இவ்வாறு அவர் கூறி முடித்தவுடன் குரு வின் மூளை துரிதமாக செயல்பட்டது.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.