6 சக்தி வாய்ந்தவன்
தூயவனின் குடும்பத்தினர் பெரிய இடத்து மனிதர்களைப் போல் பழகாமல், வெகு எளிமையாக இருந்ததால், அது பவித்ராவுக்கு நிம்மதியை தந்தது.
வெண்மதி பவித்ராவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தூயவன் விரும்பினான். ஆனால் அதை முழுமூச்சாய் கையில் எடுத்துக் கொண்டது குணமதி தான். அதை தன் மகனுக்காக தான் அவர் செய்தார் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் அவன் மனதில் ஓர் நல்லெண்ணத்தை உருவாக்க அவர் முயன்று கொண்டிருந்தார், தூயவன் அவரிடத்தில் அந்த பொறுப்பை ஒப்படைக்காவிட்டாலும், அவர் அதை செய்வார் என்று அவன் எதிர்பார்த்து இருக்கலாம்.
வெண்மதிக்கும், குணமதிக்கும் இடையில் தூயவன் காட்டிய வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்து இருந்தாள் பவித்ரா. அவர்கள் இருவரும், அவளை கவலையோடு இருக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அவர்களது கண்களில் ஆழமான ஒரு துயரம் இருந்ததை அவள் கண்டாள். அவர்கள் ஏதோ ஒரு துயரத்தை தன் மனதிற்குள் மறைத்து வைத்திருப்பதாக அவளுக்கு தோன்றியது. தூயவன் கூட, தன் அக்காவிடம் மிகவும் மென்மையாத் தான் நடந்து கொண்டான். இதைப்பற்றி எல்லாம் யோசித்தபடி அவள் கட்டில் படுத்திருந்தாள். குளியலறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, சட்டென்று தன் கண்களை மூடிக்கொண்டாள். குளியல் அறையியை விட்டு, தன் முகத்தை துடைத்தவாறு வெளியே வந்தாள் வெண்மதி.
அப்பொழுது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. வெண்மதி கதவை திறக்க, அங்கு புன்னகையோடு நின்றிருந்தார் குணமதி.
"பவித்ரா தூங்கிட்டாளா?" என்றார்.
"ஆமாம், மாம். இப்ப தான் தூங்கினாங்க"
"நான் அவளுக்கு அட்வைஸ் பண்ணதுக்கு பிறகு, அவ அழலன்னு நினைக்கிறேன்"
"இல்ல, அவங்க அழல"
"பாவம், இந்த சின்ன வயசுல, விதி அவ வாழ்க்கையில எப்படி விளையாடி இருக்கு, பாரு..." என்றார் குணமந்தி கவலையோடு.
![](https://img.wattpad.com/cover/372468502-288-k220999.jpg)
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...