43 கொடுத்து வாங்குதல்
பின் வாங்கும் எண்ணமே இல்லை தூயவனுக்கு.
"பவித்ரா..." என்றான் ரகசியமாய்
"நான்... வந்து..."
"நீ... என்ன...?"
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள் பவித்ரா.
"நீ என் கூட கம்ஃபர்டபுலா இல்லயா?"
"இல்ல, அப்படி இல்ல"
"அப்போ எப்படி? நான் உன்னை விட்டு தூரமா போயிடவா? இல்ல, ஆரம்பிச்சதை தொடரவா?"
"நீங்க தொடரலாம்" என்று திடமான பதில் வந்தது பவித்ராவிடமிருந்து.
"நீ என் மேல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரொம்ப அப்செட்டா இருந்தியே..."
"நீங்க என்கிட்ட பொய் சொன்னீங்க. அதனால நான் அப்செட்டா இருந்தேன்"
"அப்படின்னா எனக்கு மன்னிப்பு கிடைச்சிருச்சா? நான் மேற்கொண்டு எதுவும் செய்ய எனக்கு பர்மிஷன் கிடைச்சிடுச்சா?"
"நீங்க உண்மையிலேயே என்னோட பர்மிஷன்காக தான் காத்திருக்கீங்களா?" என்று அவள் கேட்க.
வாய்விட்டு சிரித்தான் தூயவன்.
!நான் ஒரு நல்ல மனுஷனா இல்லயான்னு எனக்கு தெரியாது. ஆனா, ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால எந்த ஒரு முரண்பாடும் இல்லாம என் பொண்டாட்டியோட எந்த முரண்பாடும் இல்லாம என்னோட கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். புரிஞ்சுதா? "
"நான் எப்பவுமே உங்ககிட்ட முரண்பட்டதில்லயே!"
"என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?"
"என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..."
"இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு, நான் அதுக்கு எதிரா நடந்துக்கிட்டா என்ன செய்வ?"
"நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்க, நீங்க ஒரு நல்ல புருஷனா இருக்க விரும்புறதா... நீங்க நல்லதை மட்டுமே செஞ்சா, நிச்சயமா என்கிட்ட இருந்து முரண்பட மாட்டீங்க"
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...