52 திருமதி சஞ்சனா பெரியசாமி
"என்னது? நான் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்க போறேனா? என்ன உளறல் இது? நான் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கணுமா? நீயே பார்க்க எருமை மாடு மாதிரி இருக்க... என்னை ஆத்தான்னு கூப்பிடுற..." சீறினாள் சஞ்சனா.
"நாங்க அதுக்கு என்ன ஆத்தா செய்றது? அது எங்க குடும்பத்தோட அம்சம். உங்களுக்கு ஒரு புள்ள பிறந்தா கூட அவனும் பார்க்க எருமை மாதிரி தான் இருப்பான்" என்று இடி இடி என சிரித்தான் சின்னசாமி.
"வாயை மூடு. நான் போலீஸ் ஸ்டேஷன்ல் தானே இருக்கணும்? நான் எப்படி இங்க வந்தேன்? யாரு இங்க கூட்டிக்கிட்டு வந்தது?"
"அதுல என்ன சந்தேகம்? நான் தான் உங்கள இங்க கூட்டிட்டு வந்தேன். உங்க பொறந்த வீட்ல எப்படியோ எனக்கு தெரியாது ஆனா நம்ம குடும்ப வழக்கப்படி, நம்ம குடும்ப பொம்பளைங்க போலீஸ் ஸ்டேஷன்ல காலடி எடுத்து வைக்க மாட்டாங்க. உங்களோட அன்பான பிள்ளையா இருந்துகிட்டு, அதை நான் எப்படி நடக்க விடுவேன்?அதனால தான் போலீஸ்ல இருந்து உங்களை காப்பாத்தி இங்க கொண்டு வந்தேன்"
"நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க"
"அட, நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எதையும் சரியா புரிஞ்சுக்காம நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருப்பேன்னு நினைக்கிறீங்களா?" என்று சிரித்தான் சின்னசாமி.
சஞ்சனா குழப்பம் அடைந்தாள்.
"முதல்ல நீ யாருன்னு சொல்லு"
"சின்னசாமி... பெரியசாமியோட பிள்ளை"
"சின்ன சாமியா? ஏய்... நீ தானா அது? என்னை உனக்கு அடையாளம் தெரியலையா? என்னை நீ மறந்துட்டேன்னு நினைக்கிறேன். நான் தான் உனக்கு பவித்ரா போன கோவிலை உனக்கு சொன்னவ..." என்றாள் குதூகலமாய் கூற,
"எனக்கு உதவி செய்ற மாதிரி நடிச்சவ..." என்றான் சின்னசாமி பேய் போல மாறிய முகத்துடன்.
"என்னது, நடிச்சேனா? என்னால தான் நீ அன்னைக்கு தூயவனை அட்டாக் பண்ண..."
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...