9 கையில் எடுத்த குணமதி
வீட்டில் கொட்டிய தண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார் குழந்தைசாமி. அப்பொழுது மருத்துவர் வீட்டினுள் நுழைந்தார்.
"தூயவன் ஃபோன் பண்ணி வர சொன்னாரு" என்றார் அவர்.
"நீங்க வருவீங்கன்னு தம்பி சொல்லி இருந்தாரு. வாங்க" என்று அவரை வெண்மதியின் அறைக்கு அழைத்துச் சென்றார் குழந்தைசாமி.
"தங்கச்சி மா, டாக்டர் வந்திருக்காங்க" என்றார் பவித்ராவிடம்.
அவள் சரி என்று தலையசைத்து,
"வணக்கம் டாக்டர்" என்றாள்.
அவருக்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டார் குழந்தைசாமி. பவித்ராவின் அருகில் அமர்ந்து அவளது கணுக்காலை சோதித்த மருத்துவர்,
"என்ன ஆச்சு" என்றார் அவள் கால்களை பார்த்தபடி.
"சுளுக்கு பிடிச்சுகிச்சு டாக்டர்"
மருத்துவர் வந்த விஷயத்தை தூயவனிடம் கூறுவதற்காக அவனது அறைக்கு சென்றார் குழந்தைசாமி. தனது உடையை மாற்றிக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்த தூயவன், குழந்தைசாமி தனக்காக காத்திருப்பதை கண்டான்.
"என்ன அண்ணா?"
"டாக்டர் வந்துட்டாரு தம்பி"
"ஓ..."
தன் கைபேசியை எடுத்து, பவித்ரா தனக்கு ஃபோன் செய்தாளா, இல்லையா என்பதை பார்த்தபடி வெண்மதியின் அறையை நோக்கி நடந்தான் தூயவன். ஆனால் அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. மருத்துவர் வந்தால் தன்னை ஃபோன் செய்து அழைக்கும் படி அவன் கூறியிருந்தானே, ஏன் அவள் அழைக்கவில்லை?
வெண்மதியின் அறைக்கு வந்தான் தூயவன். அதே சமயம் அந்த அறையின் கதவை திறந்தாள் சஞ்சனா.
"என்ன ஆச்சு?" என்றான் முகத்தை சுருக்கியபடி.
"பவித்ராவுக்கு டாக்டர் ஊசி போட்டாங்க. அதனால தான் கதவை சாத்தினேன்"
"ஓ..."
லேசாய் வீங்கி இருந்த அவளது காலை பார்த்த அவன்,
![](https://img.wattpad.com/cover/372468502-288-k220999.jpg)
BẠN ĐANG ĐỌC
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Lãng mạnமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...