8 நாம் ஒன்று நினைத்தால்...

567 49 6
                                    

8 நாம் ஒன்று நினைத்தால்...

கடைக்குச் சென்ற குழந்தைசாமி, பை முழுவதும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வருவதை கண்டாள் பவித்ரா. அவரை பின்தொடர்ந்து சமையலறைக்குச் சென்றாள். அவளை பார்த்து புன்னகை புரிந்தார் குழந்தைசாமி.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"

அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"உங்களுக்கு காபி போட்டு கொடுக்கட்டுமா?"

"இல்ல, வேண்டாம்"

பையில் இருந்த காய்கறிகளை வெளியில் எடுத்து வைக்க துவங்கினார் அவர். பவித்ரா அங்கு தயக்கத்துடன் நின்றிருந்ததை பார்த்த அவர், மீண்டும் அவளை பார்த்து புன்னகைத்தார்.

"நீங்க இங்க எந்த மாதிரி வேலை செய்வீங்க, அண்ணா?" என்றாள் பவித்ரா.

"நான் எல்லா வேலையும் செய்வேன். எனக்கு எந்த லிமிட்டும் கிடையாது. அவங்க என்ன சொன்னாலும் செய்வேன்."

"ஓ..."

"தனியாவே சமையல் செய்வீங்களா?"

"இல்ல எப்பவுமே அம்மா தான் சமையல் செய்வாங்க. நான் அவங்க கூட ஒத்தாசையா தான் இருப்பேன்"

"ஓஹோ"

"நீங்க எதுக்காக இதையெல்லாம் கேக்குறீங்க?"

"அப்பா என்னை சமையல்காரியா அப்பாயிண்ட் பண்ணி இருக்காரு"

அதை கேட்ட அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.

"அப்பாவா? யாரை சொல்றீங்க?"

"தூயவன் சாரோட அப்பாவைத் தான் சொல்கிறேன்"

"மாயவன் சாரையா சொல்றீங்க?"

"ஆமாம்"

"அவர் உங்களை சமையல் வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணாரா?"

"ஆமாம்"

நம்ப முடியாமல் அவளை திகைப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். பவித்ரா சமையல்காரியா?

"இதைப் பத்தி தூயவன் தம்பிக்கும், அம்மாவுக்கும் தெரியுமா?"

"இன்னும் தெரியாது"

குழந்தைசாமி யோசிக்க துவங்கினார். பவித்ரா தங்கள் விருந்தாளி என்று குணமதி கூறியிருந்தார். அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு குழந்தைசாமிக்கு அவர் கட்டளையிட்டு இருந்தார். பவித்ரா கேட்பது எதுவானாலும் கொடுக்கச் சொல்லி அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பவித்ரா அதற்கு முற்றிலும் மாறாய் கூறுகிறாள். பவித்ராவை பற்றி, குணமதி மாயவனிடம் பேசவில்லையா? ஆனால் இதுவரை அவர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் தோன்றியதில்லையே! அப்படி இருக்கும் பொழுது, இது என்ன குழப்பம்?

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now