நிஷு pov:
அப்பா அமைதியா இருக்குறதை பாத்துட்டு எனக்கு பயமாகிடுச்சு....ரிஷி கிளம்பப் போனான்....நான் அவன் கையப் புடிச்சு போகாதன்னு தலையாட்டுனேன்....அவன் போனதுக்கு அப்புறம் என்னைய கட்டாயப் படுத்திட்டாங்கன்னா என்ன பண்ணுவேன்னு பயமாகிடுச்சு
"ஒரு நிமிஷம் பா...."னு சத்தம் கேட்டுச்சு....
எல்லாரும் திரும்பிப் பார்த்தோம் அங்க ரிஷியோட அம்மாவும் அப்பாவும் நின்னுட்டு இருந்தாங்க....
ரெண்டு பேரும் உள்ள வந்தாங்க....
"என் பையன் இன்னும் சின்ன பையனா இருக்குறான்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா அவன் வளந்துட்டான்னு இப்ப அவன் இங்க பேசுனதை வச்சு புரிஞ்சுக்கிட்டேன்....உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குது டா...."னு அங்கிள் ரிஷிய கட்டிப்புடிச்சிக்கிட்டாரு.....
அப்புறம் அவரு என்னைய பாத்துட்டு என் பக்கத்துல வந்தாரு....
"நிஷா நான் கேட்குறதுக்கு தைரியமா பதில் சொல்லு...."னு சொன்னாரு...
நானும் சரின்னு தலையாட்டுனேன்....
"என் பையன நீ உண்மையா மனசு ஒத்து காதலிக்குறியா....அவன் கூட கடைசி வரைக்கும் இருப்பியா"னு கேட்டாரு
நான் ஆமான்னு அடுத்த செகண்ட் வேகமா தலையாட்டுனேன்....
அங்கிள் சிரிச்சிட்டே ஓகேன்னு தலையாட்டிட்டு அப்பா பக்கத்துல போனாரு...."ஸார் வணக்கம்.....நான் ரிஷியோட அப்பா....நான் எம்.பி யா இருக்குறேன்....நீங்க எதை வச்சு என் பையன வேண்டாம்னு சொல்லுறிங்கன்னு எனக்கு தெரியல.....அவன் இவள நல்லா வச்சுப்பான்....என்ன டா புள்ள லவ் பண்ணுறேன்றான் அப்பன்காரன் வந்து அதை சப்போர்ட் பண்ணுறானேன்னு நீங்க நினைக்கலாம்.....
எனக்கு என் பையன் மேல நம்பிக்கை இருக்குது....அவன் ஒரு விஷ்யத்தை முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிக்காம பண்ணமாட்டான்....
ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விரும்புறாங்க..அதோட உங்க பொண்ணு நிஷாவ எங்க வீட்டுல எல்லாருக்கும் புடிச்சிருக்குது..
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...