21.நெயிர்ச்சியின் முழுவல் நீ

922 58 22
                                    

நிலா லட்டு வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடு...  எதுக்கு மாமாக்கிட்ட இருந்து பிடுங்குற??

நிலா வெண்மதியை முறைக்க... ஹயோ ஆத்தா மலை ஏரிட்டா, இனி இங்க நின்னா நம்மகிட்ட சாமி ஆடிருவா... என்று நினைத்தவள் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடினாள்..

அவர்கள் இருவரையும் பார்த்து ஜெகன் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, நிலாவும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்... இருவரும் சாப்பிட்டு முடித்து செல்ல.. அங்கே அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்வதா , இல்லை பெண்ணின் வீட்டிற்கு அழைத்து செல்வதா என்று...

அங்கே சென்ற ஜெகன் , மெதுவாக தன் அம்மாவிடம் மட்டும் , நிலாவை அழைத்து கொண்டு ஹைதராபாத் செல்லபோவதாக கூற... அவர் அதெல்லாம் சம்பிரதாயம் இல்லை என அவனிடம் மறுத்துக்கொண்டு இருக்கும் பொழுது, ஜெகனின் அப்பா இவர்களை கண்டு இவர்களிடம் வந்தவர் விஷயம் என்னவென்று கேட்க...

அப்பா நானும் நிலாவும் ஹைதராபாத் போனும்... எனக்கு முக்கியமான ப்ரொஜெக்ட் இருக்கு... இப்போ கிளம்புன தான் சரியா இருக்கும்...

பிளைட்ல போலாம் தம்பி நாளைக்கு... இப்படியே போனா ஏதாவது நினைச்சுப்பாங்க... அந்த பொண்ணும் பாவம், காலையில இருந்து எவ்ளோ பாத்துருச்சு... இதுல இப்போ இந்த அலைச்சல் வேற.. என்று அவரும் அவனிடம் எடுத்து கூற..

இவர்களிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெகன்.. அவர்களிடம் எதுவும் பேசாமல் நகர்ந்து ஹரிஷிடம் சென்றவன், அர்ஜுனை அழைத்துவருமாறு கூறினான்...

என்னடா??

நான் நிலா கூட இப்போவே ஹைதராபாத் கிளம்பனும்..

இதைக்கேட்டு ஹரிஷ் அதியிற்சியாகி ஜெகனை பார்க்க.. அர்ஜூனோ அவனை பார்த்து சலித்துக்கொண்டு, "யாருக்கு நீ இவ்ளோ.. "  என்று ஏதோ கூற வந்தவன் ஹரிஷ் நிற்பதால் அமைதியானான்..

நிலாக்கு ஓகேன்னா சம்மதம் வாங்கி தறேன் .. என்று அர்ஜுன் கூற..

நெயிர்ச்சியின் முழுவல் நீNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ