4.நெயிற்ச்சியின் முழுவல் நீ

1.8K 118 28
                                    

"ஹாய்... " என்ற குரல் வெண்ணிலாவின் பின்னால் கேட்க..  யார் தன்னை அழைப்பது என்று திரும்பி பார்த்தாள்...

அவர்களுடன் வேலை செய்யும் ஒருவன் தான் அவளை அழைத்து இருந்தான்.. அவள் வேலைக்கு சேர்ந்த அன்று பார்மாலிடிக்காக  ஹாய் சொல்லியதோடு சரி.. மீண்டும் இன்று தான் அவளிடம் பேசினான்..

இவள் மெலிதான புன்னகையுடன் " ஹாய் சார்" .. என்று கூற..

சார் எல்லாம் வேணாம்.. ஜஸ்ட் கால் மீ வெங்கு..

இவள் தலையசைக்க.. " ஆபீஸ் எல்லாம் பிடிச்சு இருக்கா?? "

"ஓகே தான் .. " என்று பதில் கூறியவள் "நீங்க என்ன ப்ரொஜெக்ட் பண்றீங்க ??" என்று அவனிடம் கேட்க..

நானும் சாம்பாவும் யு.ஐ மட்டும் பண்றோம்..

ஒஹ் ஓகே சார்... சாம்பா சாரையும் இன்னும் காணோம்..

அவன் அவளை முறைக்க.. அவன் எதற்காக

தன்னை முறைகிறான் என்று புரியாமல் பார்த்தவளுக்கு அவனை சார் என்று அழைத்தது புரிய " எனக்கு பேர் சொல்ல கொஞ்சம் டைம் எடுக்கும்..  "  என்று கூறினாள்..

சாம்பா வர இன்னும் கொஞ்சம் லேட் ஆகும்.. அப்புறம் உங்க ஹரிஷ் ப்ரோ எப்போ திரும்பி வருவாரு??

அவரு வர இன்னும் 3 நாள் ஆகும்..

அப்போ இன்னைக்கு லஞ்ச் எங்க கூட வந்திருங்க..

அவள் பதில் கூறுவதற்குள் அவர்கள் அறைக்குள் ஒரு யுவதி நுழைந்தாள்..

ஹாய் வெங்கி...

ஹாய் நேத்ரா...

"எங்கே உங்க டீம் லீடர் ?? எப்போவும் போல இன்னைக்கும் லேட்டா ?? " அவள் ஏளனமாக கேட்க..

"இன்னும் வரல நேத்ரா.. ஏன் ஏதாவது பிரச்சனையா ?? "

பிரச்சனை இல்லாம உங்க ரூம்கு நான் ஏன் வரேன்??

நெயிர்ச்சியின் முழுவல் நீDonde viven las historias. Descúbrelo ahora