ஜெகன் கூறிய வேலைகளை முடித்த நிலா அப்படியே உறங்க ஆரம்பித்தாள்.. அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெகன் அவன் செய்துகொண்டிருந்த வேலைகளை முடித்து , அவள் அருகில் சென்று படுத்து கொண்டான் .. ஆனால் உறக்கம் தான் அவனிடம் வராமல் அவனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தது.. பல மணி நேரங்களாக அவனுடைய சிந்தனைக்குள் உழன்று கொண்டு இருந்தவன் நடுநிசி கடந்துதான் உறங்க ஆரம்பித்தான்....
அவர்களுது இரண்டாவது நாளும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சென்றது... இதேபோல் அனைத்து நாட்களும் நம் வாழ்வில் இருந்துவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்துவிடும்...
ஆனால் ஜெகன் நிலாவின் வாழ்க்கையில் சுவாரஸ்யத்திற்கு எந்த வித குறையும் இல்லாமல் கூடுதலாகவே இனி பார்ப்போம்..😈😈😈
ஜெகனையும் நிலாவையும் பெற்றோரிடம் பேசி ஹைதராபாத் அனுப்பி வைத்த அர்ஜுன், அங்கே அவர்களுடன் இருந்து அனைத்து வேலையும் முடித்து கொடுத்தவன் சென்னை கிளம்பி சென்றான்.. அர்ஜூனின் மூலம் ஜெகன் நிலா கல்யாணத்தை அறிந்து இருந்தவர்கள் அர்ஜுன் நேரில் வந்தால் அங்கு நடந்ததை கேட்க ஆர்வமாக காத்துக்கொண்டு இருந்தனர் அர்ஜுனின் வரவிற்காக..
அர்ஜுன் அடுத்த நாள் காலை பத்து மணி போல் அவர்கள் வீட்டை அடைந்தான்.. அர்ஜுன் நுழைந்ததை முதலில் கண்ட மித்ராவின் கண்களில் சிறு அழைப்புருதல் இருந்தது அதை கவனித்த அர்ஜுன், " ஜெகன் ஹைதராபாத் நேத்தே கல்யாணம் முடிஞ்ச கையோட கிளம்பிட்டான்.." என்று பொதுவாக கூறினான் .. பின்பு அங்கு நடந்தவற்றை ஒன்று விடாமல் கூற அனைவரும் இனி ஜெகன் மற்றும் நிலாவின் வாழ்க்கை நல்லபடியாக செல்ல வேண்டும் என கடவுளுக்கு தனித்தனியாக பிரார்த்தனை வைத்தனர்...
இங்கே ஹைதராபாத்தில் காலை ஆறு மணி ஆகி இருக்க நிலாவின் மொபைல் அலாரம் சத்தத்தில் முதலில் விழித்த நிலா அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவள் அருகில் ஜெகன் உறங்குவதை பார்த்து அலாரத்தை உடனே ஆப் செய்தாள்.. பின்பு ஜெகனின் தூக்கம் கலையாதவாறு படுக்கையை விட்டு எழுந்தவள் தனது காலை கடன்களை முடித்துக்கொண்டு கிச்சன் பக்கம் சென்றாள்..
![](https://img.wattpad.com/cover/221305079-288-k501127.jpg)