ஆழி தேவதைகள்!

20 4 29
                                    

"இளவரசிகளே" குளக்கரையின் ஓரமாக அமர்ந்திருக்கும் ராகவி மற்றும் சங்கவிக்கு அருகில் அமர்ந்திருந்த ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரையும் அழைத்தபடி அவர்களுக்குப் பக்கவாட்டில் சிறிய உருவமாக பறந்துக் கொண்டிருக்கும் தேவ அரசருக்கு அருகில் பறந்துக் கொண்டிருந்தார்கள் அவரை இங்கு அழைத்து வந்த நீலியும் சமரும்.

"தேவ அரசரே... வாங்க.." அவரின் குரலை கேட்டதுமே எழுந்து நின்ற நால்வரும் தேவ அரசரை வணங்கி வரவேற்க, "இதுக்கு என்ன காரணம்.. என்ன தீர்வுன்னு கண்டு புடிச்சுட்டீங்களா, தேவ அரசரே?" சோர்ந்து போயிருந்தத் தன் அண்ணிகளை நோக்கிப் பார்வையை செலுத்தியபடியே கேட்டாள், ரக்ஷா.

"ம்ம்.. அப்படி தான் நினைக்கிறேன், இளவரசி... அம்.. அது... தீர்வு தானென என்னால் நிச்சயமாக சொல்லிவிட முடியாது. அதை காண்பதற்கு நீங்களே என்னுடன் வந்தால் சரியாக இருக்குமென நினைக்கிறேன்"

"நாங்களும் வரணுமா?" அவரை நோக்கி வெறுமையான குரலில் கேட்டாள், சங்கவி. தேவ அரசரின் பிடிமானமில்லாத சொற்களை கேட்கையில் அதன் பின்னிருக்கும் விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆவல் அவளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உடலின் சோர்வு அவளை இப்படி கேட்கச் செய்துவிட்டது.

"ம்ம். நீங்களும் வந்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால், இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலைமையில்... .... உங்கள் விருப்பம்தான்"

"அப்போ நாங்க இங்கேயே இருக்கோம். நீங்க போய்ட்டு வாங்க." இளவரசிகளை பார்த்த ராகவி, அப்படியே தேவ அரசரை நோக்கியும் தன் பார்வையைத் தொடர்ந்துக்கொண்டே கூறினாள். அவர்கள் நிலமையை புரிந்துகொண்டு சரியென தலையசைத்த இளவரசிகள், தேவ அரசர் முன்னோக்கிப் பறக்க அவரை பின்தொடர ஆரம்பித்தார்கள்.

✨✨✨

மணிக்கட்டில் இருக்கும் தன் புதிய-குட்டி வாள் மின்னிக்கொண்டே சற்று மேலே எம்பிப் பறப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷவ் முகத்தின் மேல் ஏதோ ஒரு உருவத்தின் நிழலாட "எவன் டா அது வெளிச்சத்த மறைக்கிறது" என நிழல் வந்த திசை நோக்கித் திரும்பியவன் கண்கள் அதிர்ச்சியில் விரிய.. விக்கித்துப் போனான் அவன். ரக்ஷவ் மட்டுமல்ல அவனை சுற்றி அமர்ந்திருந்த மற்ற நால்வரின் நிலை கூட அதுவே தான்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now