ரட்சக ராஜ்ய இளவரசிகளால் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக திரிபுரா நகரத்தின் எல்லையில் எழுப்பபட்ட அந்த மாயக் கவசத்தின்மேல் வந்து மோதியது, சமாராவின் மாயத் தாக்குதல்கள். இத்தனை காலமும் இருள்ராஜ்ய இளவரசனை அந்த நகரத்தினுள்ளே அனுமதிக்காமல் திடமாக நின்றிருந்த அக்கவசம், இன்று தன் இறுதிப் பிடியில் நின்றிருந்ததால் அவளின் ஒரு தாக்குதலுக்கே ஆட்டம் கண்டிட.. தன் சக்தியின் வேகத்தால் மெல்ல மெல்ல வலுவினை இழந்து நிர்மூலமாகும் அக்கவசத்தை ரசித்த நிலையில் நின்றிருந்தவளின் பின்னால் உணர்வற்ற முகத்துடன் நின்றிருந்தான், ஷேனா.
சமாராவின் கைகள் இரண்டும், வழுவிழந்த அக்கவசத்தை நோக்கியே குவிந்திருக்க.. அவள் கைகளின் வழியே பாய்ந்துவரும் கறுநிறக் கதிர்கள், இறுதிப்பிடியில் இருந்த இளவரசிகளின் சக்தியை முற்றிலுமாக உடைத்தெறிந்த நொடியில் அவள் இதழோரம் தோன்றியது பேராசையின் வெற்றிப் புன்னகை. கண்களை மூடி அந்நிகழ்வினை ரசித்தபடி, உடைக்கப்பட்ட எல்லை கவசத்தை தாண்டி திரிபுரா நகரத்தினுள் அடியெடுத்து வைத்தாள், சமாரா.
"ஷேனா," கைகள் இரண்டையும் விரித்த நிலையில், மூடியிருக்கும் தன் கண்களை அவள் திறக்க... அடர்ந்த இருளின் நிறத்தில் மிளிர்ந்த அவள் விழிகளுக்குள் பேராசையின் தேடல் அலைமோதியது. "இந்த திசை தான். இங்கதான் உன் சக்திகளுக்கு ஈடான அதீத சக்தியோட விசைய உணர்றேன் நான்" மீண்டும் அவள் கண்களை மூடி அந்த சக்தியின் விசையை உள்வாங்கி ரசிக்கத் தொடங்கிட.. கண்களை மூடிய நிலையில், ரட்சகனின் சக்தியை அபகறிக்கும் பேராசையின் உணர்ச்சி மிகுதியில் இருந்த அவள் முகத்தில் ஒரு தீடிர் குழப்பம். சட்டென இமைதிறந்தவள் எதிர்திசையில் தன் தலையை திருப்பினாள்.
"ஆனா, ஷேனா.. எதிர்திசையிலயும் அதேமாதிரியான ஒரு சக்தி இருக்குற மாதிரி தெரியுது."
"என்ன உளர்ற, சமாரா"
"நான், ஒன்னும் உளறல," அருகிலிருக்கும் ஒரு மறைவான புதரை நோக்கியபடி பல்லை கடித்தவள், "அதோட, சில அர்ப்பமான சக்திகளும் இங்க இருக்கு" என்றபடியே தன் கைகளை சுழற்றி அந்த புதரை தாக்கினாள். அவளின் தாக்குதல் அந்த மறைவிடத்தை அடைந்திடும் முன்பாகவே அபியின் மாயவாயிலால் அங்கிருந்து தப்பியிருந்தார்கள் இளவரசிகள்.
ESTÁS LEYENDO
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poesíaகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...