துரத்திடும் நினைவுகள்

10 4 9
                                    

இரவு உணவுக்கு பின், மொட்டை மாடியின் சுவற்றில் சாய்ந்தபடி கால்களை நீட்டிக்கொண்டு சங்கரி அமர்ந்திருக்க.. அவளின் இரு புதல்வன்களும், அன்னையின் மடிமீது தலை வைத்துக்கொண்டு இரு திசையிலும் கால் நீட்டிப் படுத்திருந்தார்கள்.

"ம்மா.." வானை பார்த்துக்கொண்டே, யோசனையுடன் அர்ஜுன் அழைக்க, "ம்ம்?" மகனை நோக்கினாள், சங்கரி.

"அப்டினா, எனக்கு ஒரு அத்த இருக்காங்களா?"

"ம்ம்.. ஆமா டா."

"அத்தைக்கு பொண்ணுங்க இருக்கா?" அவன் வானை நோக்கியபடியே கேட்க, மகனை ஒரு பார்வை பார்த்தவள், "ஒரே ஒரு மகன் மட்டும் தான்டா" எச்சரிக்கை செய்யும் குரலில் பதிலளித்தாள் அவள்.

"ச்ச.. பொண்ணு இருந்தா கல்யாணம் பண்ணி, அத்தையவும் சேத்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்" தன் திட்டம் பொய்யாகிப் போன வேதனையில் அவன் நொந்துக்கொள்ள, "அடிங்கு.. வயசுக்கு ஏத்த பேச்சா டா பேசுற" மகனின் முதுகிலேயே ஓங்கி ஒரு அடியை வைத்தாள், சங்கரி. அதைகண்டு களாரெனே சிரித்தான், ஹர்ஷன்.

"ஹிஹிஹி.. எந்த விதத்துல அவங்க நமக்கு சொந்தம் ம்மா?" அர்ஜுனும் லேசாக சிரித்தபடி கேட்க, "அப்பாவோட தங்கச்சி?" அன்னையை முந்திக்கொண்டு, முழுதாக தெளிவில்லாமல் பதிலளித்தான், ஹர்ஷன்.

"ஆமா டா ஹர்ஷா.. உனக்கு நியாபகம் இருக்கா?"

"ம்ம்.. கொஞ்ச கொஞ்சம் ம்மா.. ....... கடைசியா நம்மக்கூட இருந்தப்போ அவங்க ப்ரக்னென்ட்டா இருந்தாங்கள்ல?" அத்தையுடன் பேசி விளையாடிய அந்த நினைவுகளில் ஒருசிலவை ஹர்ஷனின் நினைவுகளில் தலைதூக்க முயன்றது.

"ஆமா டா.. நம்ம அஜ்ஜுக்கும் தேவா பையன் ரக்ஷவனுக்கும் நாலு மாசம் தா வித்தியாசம்"

"ஹ்ம்ம்.. அவனாச்சும் பொண்ணா இருந்துருக்கலாம்" அன்னையின் சொல்லுக்கு, போலியான விரக்தியுடன் பெருமூச்சு விட்டான், அர்ஜுன்.

"ம்ம்? இருக்கலாம் இருக்கலாம்.. உங்கண்ணன் உன்ன பொண்ணா இருந்துருக்கலாம்குறான்.. நீ, அவன பொண்ணா இருக்கலாம்குற.. ஏன்டா இப்டி இருக்கீங்க?" இரு மகன்களையும் ஒரு விசித்ர பார்வையில் அவள் பார்க்க, "ம்மா.. அதெல்லாம் ஒரு தனி ஜாலி ம்மா. உனக்கு புரியாது.." சங்கரியின் மடியிலிருந்து குதூகலமாக எழுந்துவிட்டான், அர்ஜுன்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Donde viven las historias. Descúbrelo ahora