"என்னை அவ்வளவு எளிதில் கூட்டி செல்லலாம் என்று நினைத்தாயா"என்று கூறி அவன் கையை தட்டி விட்டு தன் இடுப்பில் வைத்து இருந்த வாளை எடுத்தாள்.
"ஏய்"என்று கத்திக் கொண்டே இரு வீரர்களும் தனது குதிரையிலிருந்து கீழே குதித்தனர்.
செங்கல்வராயன் தனது கையை தூக்கி அவர்களை நிறுத்தினான்.
"ஓ நீ வீர மங்கை என்று மறந்துவிட்டேன்.வா என்னுடன் வாள் சண்டையிட்டு உன்னை நீ காபாற்றிக் கொள் "என்று கூறி தனது வாளை எடுத்தான்.சம்யுக்தை தனது வாளை சுழற்றினாள் அதை அவன் எளிதாக எதிர் கொண்டான்.
இருவரும் நேர்த்தியாக சண்டையிட்டனர்.
இரு விரர்களும் இவர்களை வேடிக்கை பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் சம்யுக்தை சுழன்று சென்று அவனை தாக்கினாள்.அவன் கையில் வெட்டுப்பட்டு இரத்தம் வழிந்தது.வீரர்கள் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.
கோவம் அடைந்த செங்கல்வராயன் அவளை வேகமாக தாக்கினான்.அவள் தாவனியை குறி வைத்து கிழித்தான்.
சம்யுக்தை ஒரு கையால் தனது தாவனியை பிடித்துக் கொண்டு அவனை முறைத்தாள்.மூவரும் சிரித்தார்கள்.
"வா சம்யுக்தை.வந்து சண்டையிடு."என்றான் செங்கல்வராயன்.
அவள் ஒரு கையால் தனது ஆடையை பிடித்துக் கொண்டு இன்னுரு கையால் வாளை பிடித்து சண்டையிட்டாள்.
இப்போது செங்கல்வராயன் வேகமாக வாளை சுழற்றி அவள் பாவாடையின் ஓரத்தை கிழித்தான்.
பாவாதை கிழிந்து அவள் தொடை பகுதியை வெளிப்படுத்தியது.தன் பாவாதையை பிடித்துக் கொண்டு தன் மானத்தை காத்துக் கொள்ள கீழே அம்ர்ந்தாள் சம்யுக்தை.
சிரித்தான் செங்கல்வராயன்.
"என்ன சம்யுக்தை அதற்குள் சரணடைந்துவிட்டாள் எப்படி.நான் உன் வீரத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்"என்றான்.சம்யுக்தை தனது தலையை குணிந்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.