அத்தியாயம் 25

2.5K 187 28
                                    

" ஆதி ஏதாவது சேஞ்ச் தெரியுதா அவளிடம்?  " என்று கேட்டுக்கொண்டிருந்தான் சூர்யா ஆதிஸ்வரனிடம்.

" ம் கொஞ்சம் மாற்றம் தெரியுது.   ஆனா நாம எதிர்பார்க்காத வேறொரு பிரச்சனை இருக்கு.   கடைசி வரை சிங்கிளா இருந்துவிடுவா போல. " என்று அவள் கூறியதை கூற

" சரியா போச்சு போ.   இவ செட்டில் ஆகாம நாம எங்கிருந்து செட்டில் ஆக?  இந்த எக்ஸாம்ல கண்டிப்பா வேலை கிடைச்சுடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.   என் மாமனார் மாங்கா மண்டையன் வேற உயிரை வாங்கிக்கொண்டு இருக்கிறான்.   காலையில் நாலு மணிக்கே அலாரம் வைத்து எழும்பி எனக்கு போனை போட்டு படி,  படி என்று உயிரை வாங்குகிறான்.   ராத்திரி பனிரெண்டு மணியானாலும் தூங்கவிடமாட்டேன்குறான்.   கல்யாணம் மட்டும் ஆகட்டும் வத வதன்னு புள்ளைங்கள பெத்து மாங்கா மண்டையனை ராத்திரியெல்லாம் தூங்க விடாமா பண்றேன்னா இல்லையா பாரு.  சை அவனை நினைச்சாலே பேச்சு ட்ரக் மாறிடிது. ஆஷு என்ன பண்ணிட்டு இருக்கா ?" என்று கேட்டான் சூர்யா.

" அவ கடல் மணலுல உருண்டுட்டு இருக்கா." என்றான் ஆதீஸ்வரன்.

" என்னடா சொல்ற? " என்று கேட்டான் சூர்யா அதிர்ச்சியுடன்.

" குளிச்சிட்டு இருக்காடா.  இங்கே ஒரு ஆறு பேரை பிடிச்சி வச்சிருக்கா.  பிடிச்சா உடும்பு தானே அவ.    ஒரு மணிநேரமா மண்ணுல உருண்டுட்டு இருக்குறா.  எப்போ வருவாளோ?  பசி குடலை புடுங்குது.  விட்டுட்டு தின்னாலும் என்னை குதறிடுவா?  இப்போதைக்கு வரவும் மாட்டா " என்றான் ஆதீஸ்வரன்.

" நீ சொன்னது போல இல்லடா.   ரொம்பவே மாறிருக்கா.   நல்லது எல்லாம் ஒரே நேரத்தில் நடக்காதுடா.  கொஞ்சம் கொஞ்சமா மாறட்டும்.  இதிலிருந்து வெளியே வரட்டும் அப்புறம் மற்றதை பார்க்கலாம்." என்றான் சூர்யா.

" பார்க்கலாம் பார்க்கலாம். " என்றான் ஆதீஸ்வரன்.

" ஆதி " என்று தூரத்தில் இருந்து அலறினாள் ஆஷ்னா.

" வந்துட்டேன் " என்றவன்
" கூப்பிடுறா சூரி,  அப்புறம் போன் பண்ணுறேன் " என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now