" என்ன? " என்றான் ஆதீஸ்வரன்.
" எல்லாம் வெறும் வாய்பேச்சோடுதான் இல்லையா? உன் இஷ்டம் போல வாழு என்று சொல்லிட்டு இப்போ இப்படி சங்கு பிடியா பிடிக்கிற. ஒரு முறை பட்ட காயமே ஆறாம ரணமா இருக்கு. இன்னொரு முறை காயப்பட எனக்கு தெம்பில்லை. " என்றாள் அவள்.
" என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு. இல்லையென்றால் என் முடிவுதான் இறுதியானது. எவன் கடமைக்கும் வாழ்க்கைக்கும் இடையே அல்லாடுவான்? என்னால முடியாது. நான் செட்டில் ஆகவேண்டும் என்று நீ நினைச்சா ஓகே சொல்லு. " என்றான் அவன்.
" என் அம்மாவை போல நீ என்னை ரொம்ப வற்புறுத்துற ஆதி. இவ ஏண்டா நமக்கு ஓகே சொன்னா என்று நீ பீல் பண்ணும் கட்டாயமும் உனக்கு வரலாம். கல்யாணத்தை முடித்தோம், வாழ்க்கையை தொடங்கினோம், குழந்தைகளை பெற்றோம் என்று ஸ்மூத்தா போகாது உன் வாழ்க்கை. என் பழைய காயம் பல இடத்தில் உன்னை காயப்படுத்தலாம். அப்புறம் மற்ற அட்டஸ்டேண்டிங் எல்லாம் நடக்குமா? லேட்டாகுமா? நடக்காமல் போகுமா என்றெல்லாம் உனக்கு உத்தரவாதம் தரமுடியாது.
கல்யாணம் என்றால் அது வெறும் செக்ஸ் என்றுதான் என் மனசுல ஆழமா பதியவைத்தான் அந்த பொறுக்கி. ஐ ஹேட் தட். ஐ அம் அ டாக்டர். பட் ஐ ஹேட் மை பாடி. இதை வைத்துதானே பெண்களை இவ்வளவு இழிவாக பேசுறானுங்க. உனக்கு இதில் எந்த ஆட்செபனையும் இல்லாட்டி மேலே உன் விருப்பம் போல நடத்து." என்றாள் அவள்.
" அதை பற்றி நீ ஏன் கவலைப்படுற. எனக்கு தேவைன்னா அதை எப்படி வாங்கணுமோ அப்படி வாங்கிப்பேன். இதெல்லாம் ஒரு காரணம் என்று யோசிக்க சொல்லுற " என்றான் இவன்.
" அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்ல உனக்கு வாய்வரவில்லையே ஆதி" என்றாள் அவள் வருத்ததுடன்.
" காரியம் முடிந்த பிறகு பார்த்துக்கலாம் என்று எனக்கு பொய்யான வாக்கு கொடுக்க தெரியாது. நீயும் நானும் வீட்டுக்கு ஒரு பிள்ளைங்க. எவனோ ஒரு கேடுகெட்டவன் ஏதோ சொன்னான் என்று நம்ம வம்சத்தை நம்மோடு முடிச்சிடலாம் என்று நினைக்கிற நீதான் மாறனும், நான் இல்லை. நீ எதையுமே எமோஷ்னலா யோசிக்கிற, நான் ப்ரக்டிகலா யோசிக்கிறேன். உன்னை எந்த விதத்திலும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன். உனக்கு பிடிக்கலன்னா உன் நிழலைக்கூட நான் தொடமாட்டேன். ஆனால் பிடித்தால் உன் வீணாப்போன வாதத்திற்கு எல்லாம் கட்டுப்பட்டு நிற்கமாட்டேன். வா வந்து உன் ஆத்தாளை சமாளி. மனுஷன் டென்ஷன் தெரியாம அது வேற தையா தக்கான்னு குதிக்கும் " என்றான் அவன்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.