வேண்டிய விடியல் வீழ்கையிலே...
வானொலி செய்தி வீட்டினிலே...
வெள்ளம் வந்தது (ஊ)வூரினிலே...
அடடா!!!
வெயிலில் வற்றிய ஏரியிலே
வான்வீடு கட்டி வாழ்ந்தனரே!வீட்டை திருடன் திருடியதால்
வான்-நீர் மறியல் செய்திடுதோ?வீட்டின் உண்மை குடிமகனை
வேண்டா வெறுப்பாய் விரட்டியதால்!வெந்து போகின நன்னீரும்
வெய்யோன் மடியில் முறையிட!வந்தான் வெயிலில் வெய்யோனும்!!!
வெறித்தான் - வறண்டது முழுநாடும்
அறியா திருடா, அறிவிலியே!!!நன்னீர் வீட்டை வளர்த்துவிடு...
நன்றாய் நீயும் வாழ்ந்துவிடு...!- *சகோ* ச.பை முகமது சல்மான்
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...