பலமற்ற(உடல் வலுவில்) பெண் பிறவியில் நீ பிறந்தாய்
பெருவலி பொறுத்து பாரில் என்னை பெற்றாய்
பள்ளி செல்லும் முன்பே கல்வியை நீ கொடுத்தாய்.
பகலிரவு பாராமல் பெருமையுடன் உழைத்தாய்.அன்பும் அறிவும் அழகுடன் அளித்தாய்
அமதுணவை அன்பு கலந்து படைத்தாய்துயரில் நானிருக்க கண்டால் அழுதாய்
மகிழ்வில் நானிருக்க கண்டால் சிரித்தாய்
நான் பிறந்த பொழுது மட்டும்
நானழுதிட நீ சிரித்தாய்.அதிகாலை முதல் நள்ளிரவு வரை உழைத்தாய்
சிறு அகவையில் சிற்றறிவுடன் நானிருந்திட நீ ரசித்தாய்படுத்திருந்த என்னை நீ எழுந்து நடக்க வைத்தாய்
அன்று முதல் இன்று வரை என்றும் என்னை விழுந்திடாமல் காத்தாய்
பரம்பொருள் தந்ததில் பெரும்பொருள் நீ தான் என் தாய்.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...