ஆயிரம் துளிகள்
ஆறென பெருக,
அணையென இமைகள்
அதனையும் தடுக்க,
புயலென துன்பம்
பெருகியே போக;உடைந்தது அணையும்
உள்ளம் நோக .
வலியில் கண்ணீர்
வழிந்தே ஓட,
கைகள் இனைந்து
கெஞ்சும் பிச்சை.
கல்லும் கரையும்
கண்ணீர் வரவே;
கடவுள் கேட்டார்
கேட்டிடு வரமே...இறைவா..
நெஞ்சம் நாடும் நெஞ்சம்,
வேறொரு நெஞ்சில் தஞ்சம்.
அவை சேரும் வாய்ப்புக்கு பஞ்சம்;
அதை சேர்த்திடு இறைவா கொஞ்சம்;
என்றே என்னிதழ் கெஞ்சும்.இருப்பினும்,
ஓரமாய் ...
ஒரு விண்ணப்பம்.
என் இனிய நெஞ்சே..,
என்னெஞ்சை நாடினும்
இன்னெஞ்சை மறவாதே😢😢.இப்படிக்கு:
உன் நலம் மட்டுமே நாடும் நெஞ்சம்.Hi sagokkalae.... Semester leav naala online vara mudila. Ipo sem leav mudiya pothu so online vantha udanae oru update poturke. Pidichirintha vote commentoda niruthidama naalu pera tag panni padikka vaicha supporta irkum nanbargalae...
Enjoy life❤
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...