உறவுகள் உயிரானால்......
யாரோவென இருந்த நீ ....
ஏனோ என் வாழ்வில் வந்தாய்???உறவாம் அண்ணனில்லை நீ
உயிராம் நட்பு என்றாய்.
உண்மை நட்பு கிடைத்ததென
உவந்து வாழ்வில் மகிழ்ந்தேன்ஒவ்வொரு செயலிலும் உடனிருந்தாய்
ஒவ்வொரு முடிவிலும் துணையிருந்தாய்.
ஒவ்வொரு மகிழ்விலும் மனமகிழந்தாய்
ஒவ்வொரு வலியிலும வழி கொடுத்தாய்உடலால் என்னை பெற்ற தாயிருக்க
அன்பால் என்னை செதுக்கி தாயானாய்..அழகான நட்பிது
அழியாதென எண்ணியிருக்க
பாலினம் எனும் பாகுபாடால்
பாழாகியதே பரிதாபம்....மூச்சு முடியும் வரை இருப்பேன் என்றாய்
மூச்சாக முடிந்ததே அந்த வாக்குகள்.. -என்
மூச்சும் முற்றிவிடாதா இத்துடன்??என்னை விட்டு நீங்க உனக்கு மனமில்லை.
உன்னை விட்டு நீங்க எனக்கு மனமில்லை.மறுஜென்மத்தில் எனக்கு நம்பிக்கையில்லை
இருந்திருந்தால் வேண்டிருப்பேன்...
நீ எனக்கு அன்று நட்பாக வேண்டுமென....இப்படிக்கு:-
பிரியமுடன் பிரிய இயலாமல் பிரியும் உன் தடியன்......
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...