paguthi15

2.5K 161 165
                                    

அங்கு மித்ராவை உறங்க அனுப்பிய பிரியா அவளது அறைக்கு வர அவிநாஷோ அழுது கொண்டு இருந்தான்.அவன் அருகில் வந்து அமர்ந்த பிரியா அவன் தோள் தொட்டு திருப்ப இதுவரை விசும்பல்களாக இருந்த அவனது அழுகை அதிகமானது.

பின் அவளை அணைத்துக் கொண்டவன் மேலும் குலுங்கி குலுங்கி அழுதான்.அவனது அழுகையை கண்டு பதட்டமான பிரியா "அவி அவிமா ஏன்டா அழுகுற ?"என்று கேட்க 

அவனோ "நாளைக்கு என் அக்காவோட பொறந்தநாள்.அவளும் நானும் ஒவ்வொரு வருஷமும் அவளோட பொறந்தநாளுக்கு 12 மணிக்கு எந்திருச்சு கேக் வெட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டு,பாட்டு போட்டு ஆடி ஜாலியாஹ் கொண்டாடுவோம்.அவ காணாம போய் இன்னையோட 10 நாள் ஆகுது .நான் அவளை ரொம்ப மிஸ் பண்ணுறேன்"என்று மீண்டும் அவள் நெஞ்சில் சாய்ந்து அழ அவளோ அவனை ஆசுவாசப்படுத்த வேண்டி அவனை அணைத்து அவனது முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தால்.

 அவன் கேவல் அடங்கும் வரை பின் அவனை விலக்கியவள் அவனது முகத்தை கையில் ஏந்தி அவனது கண்ணீரை துடைத்து விட்டவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு "உன் அக்கா சீக்கரம் கெடச்சுடுவா.நாளைக்கு அவளோட பொறந்தநாள் நீ அவளோட தான் கொண்டாடுவ."என்று கூறி அவனை படுக்க வைத்து தட்டிக் கொடுத்தால் அவன் உறங்கும் வரை.


பின் "ஏன் பிரியா அவன்கிட்ட அப்டி சொன்ன ?"என்று குரல் கேட்க அவள் திரும்பி பார்த்தால் அங்கு அறை வாசலில் அர்ஜுன் நின்று கொண்டிருந்தான்.

அவனிடம் பேச வேண்டாம் என்று சைகை காட்டியவள் அவினாஷிற்கு போர்வையை போர்த்தி விட்டு அவனை அழைத்துக் கொண்டு அவ்வீட்டின் தோட்டத்திற்கு வந்தால்.

பின் மீண்டும் அர்ஜுன்"ஏன் பிரியா அவன்கிட்ட அப்டி சொன்ன??அது நிவேதா இல்லைனா என்ன செய்வ??"என்று கேட்க 

ப்ரியாவோ புன்னகையோடு "அது கண்டிப்பா நிவேதாவா தான் இருக்கும் .என் உள்மனசு சொல்லுது."என்க 

அவனோ "என்ன பிரியா இது உள்மனசு அது இதுன்னு practicallah யோசிச்சு பாத்தியா .if சப்போஸ் அது நிவேதாவா இல்லனா அவன் எவ்ளோ கஷ்டப் படுவான் ??கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா?"என்று கூறி அவள் புறம் திரும்ப 

மந்திர தேசம்(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora