paguthi 8

2.7K 171 64
                                    

அடுத்த நாள் காலை என்றும் போல் கதிரவன் தன் கடல் தாயின் அணைப்பிலிருந்து மனமின்றி பிரிந்து தன் செங்கதிர்களால் இவ்வுலகை ஒளிமயமாக்கிக்கொண்டிருந்த நேரத்தில் நமது கதையின் நாயகர்களும் நாயகிகளும் தங்கள் அலுவலகத்தில் இன்று செல்ல வேண்டிய இடங்களை பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய வேலைகள் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர் (அப்டி என்ன பேசிட்டு இருப்பானுங்க சரி உள்ள போய் பாப்போம் ).

அங்கு அர்ஜுன் அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்க கார்த்திக் மட்டும் அவனை முறைத்துக்கொண்டிருந்தான்(இந்த பக்கி ஏன் இப்டி மொறைக்குது.இதுலாம் உனக்கு செட்டாகாதே டா )

அர்ஜுன் "ஓகே guys நாம நேத்து பேசுன மாறி நாம இப்போ செல்லிகிராமம் areakkum சிறுகுளம் areakkum ரெண்டு டீம்மாஹ் பிரிஞ்சு போக போறோம்நானும் ப்ரியாவும் செல்லிகிராமம் போறோம் நீயும் மித்ராவும் சிறுகுளம் போறீங்க சரியா?"என்று கேட்க 

மித்ராவோ "எது இந்த கொரங்கு கூடயா என்னால முடியாது அர்ஜுன் வேணுன்னா நீங்க என் கூட வாங்க நா அவனோட போக மாட்டே ன்."என்று கூறுகின்றாள் .

அதை கேட்ட கார்த்திக் "ஏய் மித்ரா நாம ஒன்னும் tour போகல official விஷயமா தான் போகப்போறோம் சோ don't be சில்லி நா உன்ன எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் ஓக்கவா" என்று பொறுமையாக பேசினான் இதை கேட்ட 

மித்ராவோ"என்ன இந்த மனுஷகொரங்கா என்கிட்டே பொறுமையா பேசுறான் ??நா எதுவும் கனவு கான்கிறேனா இல்ல இவனுக்கு மண்டைல எதுவும் அடி பட்ருச்சா??"என்று எண்ண மீட்டுக்கொண்டே அவனை நோக்கினாள் பின் கார்த்திக் அவளை அழைத்துச்சென்றான் .

(என்னடா கார்த்திக் கிட்ட இந்த திடீர் மாற்றம்னு நெனைக்குறீங்களா அதுக்கு ஒரு சின்ன பிளஷ்பக் பாப்போம் )

நேற்று மாலை

அர்ஜுனும் கார்திக்க்கும் தங்களது தாங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர் .வந்ததும் அர்ஜுன் வீட்டின் balconykku சென்று அஸ்தமிக்கும் சூரியனின் அழகிலும் எதிரில் ஆயிரம் சூரியனின் பொலிவோடு எதிர் வீட்டு balconyil நின்றுஅத்தெருவில் விளையாடும் குழந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த தன்னவளின் வதனத்திலும் தன்னைத் தொலைத்திருந்தான்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now