paguthi 23

2.1K 146 93
                                    

கார்த்திக் கண்ட காட்சியால் உறைந்து நின்றான் ஏனெனில் அந்த அரண்மனையின் வாயிலில் இருந்து இன்னொரு உருவமும் தன் தலை முதல் கால் வரை மூடி விட்டு வந்தது.பின் அது பலி பீடத்தை நெருங்கி வந்தது அது அப்பலி பீடத்தில் எரிய பின் தன் முகத்தில் உள்ள துணியை எடுத்தது.ஆம் நம் மித்ராவே தான் ஆனால் முழுதும் மாறி இருந்த மித்ரா.

அவளது கண்ணில் பழைய கருணை இல்லை அதற்கு பதில் அகங்காரம் இருந்தது,அவளது உதட்டிலோ ஏளனச் சிரிப்பு,அவளது நடையிலோ அதிகாரத் தோரணை என மித்ரா முழுவதுமாக மாறி விட்டிருந்தாள் .இன்னும் அதையே ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருந்த கார்திக்கிற்கோ அவள் ஹோம குண்டத்தில் அமர்ந்து மந்திரம் உச்சரித்து பூஜை செய்ய கார்த்திக் தலை சுற்றி கீழே விழுகாத குறையாக நின்று கொண்டிருந்தான் .

கார்த்திக் "என்.. என்... மித்... மித்துவா இது .ஒருத்தி எப்படி ஒரு வாரத்துல இப்டி மாறுவா .இல்.. இல்ல இதை நான் நம்பமாட்டேன் ."என்று தனக்குள்ளேயே பேச ஆனால் அவன் கண்ணால் காணும் காட்சி அனைத்தும் அதுவே மெய் என்றது .சிறிது நேரத்திற்கு பின் முதல் பூஜை நிறைவடைய மித்ரா சம்யுக்தாவின் தாழ் பணிந்தால்.

அதை கண்ட கார்த்திக்கின் ரத்தம் கொதித்தது அவன் கண்கள் சிவப்பாக தன் க்ரோதத்தை காட்டும் வழி தெரியாமல் தன்னை கட்டு படுத்திக் கொண்டிருந்தான்.பின் தன் மனதில் "மித்து நீ இதை உன் மனசார செய்றன்னு எனக்கு தோணல என ஆனாலும் சேரி உன்ன மீட்பேன் .இது நம்ம காதல் மேல சத்தியம்."என்று தனக்குள் சபதமெடுத்தவன் அங்கேயே நின்றான்.

அங்கே சிறையில் அம்முதியவர்"நான் கூற போகும் சரித்திரம் மிகவும் பழமையானது .பல வருடங்களுக்கு முன் இந்த மாயாபுரி 100 காத தூரம் பரந்து விரிந்திருந்த செல்வ செழிப்பு மிக்க ஒரு ராஜ்யமாக திகழ்ந்தது .கலையும்,வணிகமும்,பக்தியும் , என மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருந்த ராஜ்ஜியம்.எங்கள் கோ சிம்மசொப்பனம் ,நேர் பார்வை கம்பீரமான நடை கருணை ததும்பும் கண்கள் .நீதி சோழனுக்கு சற்றும் குறைவில்லாது நீதி வழங்கும் நீதிமான் .அவர் நாமம் ஷிவதேவ் வர்மா .

மந்திர தேசம்(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora