paguthi 24

2.1K 142 113
                                    

காலை கதிரவன் அழகாக விடிய அக்காலை வேளையின் அழகை பூஞ்சோலையில் கழித்துக் கொண்டிருந்தாள் ருத்ரமதி.அந்த காலை நேரத்தில் பனி எங்கும் சூழ்ந்திருக்க சில்லென்ற காற்றில் மரங்கள் சல சளவென்ற ஓசையுடன் அசைய மல்லிகை பூக்கள் சூழ்ந்திருக்கும் அந்த விசாலமான அரண்மனையில் அமைந்த சிறு குளத்தின் படியில் அமர்ந்திருந்த ருத்ரமதி எதிரில் தெரிந்த ஆஜானு பாகுவான மலையையும் அந்த ரம்மியமான சூழலை ரசித்துக் கொண்டிருந்தாள்.அன்று அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற உடை சூரியனின் செங்கதிர்களால் பளபளத்து சிகப்பெரிய அவளது கன்னத்தை மேலும் சிகப்பாகியது ,யாரும் கண்டதும் மயங்கும் ரதியை போல் காட்சி அளித்தால் ருத்ரமதி .

அவள் அங்கே இயற்கையின் அழகில் சஞ்சரித்திருக்க அங்கே அவளை போலவே ஆடை அணிந்த ஒரு பெண் வந்து "ருத்திரா இங்கே என்ன செய்கிறாய் இன்று நாம் சுனை அருவிக்கு சென்று விளையாட திட்டமிட்டிருந்தோம் நினைவு இல்லையோ உனக்கு ?"என்று வினவ

அவளோ"இல்லை ஊர்வசி எனக்கு நினைவு உள்ளது இன்று ஏனோ மனது மிகவும் மகிழ்சியாக உள்ளது ஆதலால் இயற்கை தாயின் அழகில் என்னையே தொலைத்துவிட்டேன் ."என்று கூற

ஊர்வசியோ "பருவப் பெண்களின் எல்லையில்லா மகிழ்ச்சிக்கு காரணம் ஒரு ஆடவனின் நினைவுகளாகவே இருக்கும் உனது நினைவை ஆட்சி செய்யும் அந்த ஆடவன் எவனோ "என்று கேலி செய்ய

ருத்ரமதியோ "போதும் உன் பரிகாசம் அங்ஙனம் ஒன்றும் இல்ல .வா இப்பொழுது செல்லலாம் "என்று கூறி செல்ல

ஊர்வசியும் "உன் மனதை வெல்ல ஒரு மன்னன் இல்லாமலா போய் விடுவான் "என்று கூறிவிட்டு அவள் பின்னோடே சென்றால் .

அவர்கள் இருவரும் ரதத்தில் ஏறி காட்டின் வழி பயணித்து சுனை அருவியை அடைந்தனர் .சுனை அருவி அண்ணாந்து பார்த்தாலும் அவ்வருவியின் ஆரம்பத்தை காண இயலாதவாறு உயர்ந்து அமைந்திருந்தது ,சுற்றிலும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் ,தண்ணீர் அருந்த வைத்திருக்கும் புள்ளி மான்கள் என அந்த சுனை அருவி மிகுந்த சௌந்தர்யத்தோடு இருந்தது .

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now