paguthi 22

2.1K 146 129
                                    


பின் பிரியா அவ்விடத்தை விட்டு வெளியேறி அந்த அரண்மனையின் தோட்டத்திற்கு விரைந்தாள் .பின் அங்கே ஓர் அடர்த்தியான கிளைகளை உடைய மரத்தின் அடியில் கார்திக்க்கும் அர்ஜுனும் இருப்பது தெரியவே இவள் அங்கு சென்றால் .சென்றவள் கார்த்திக்கின் தோள் தொட அவனோ "அம்மா பேய் காட்டேரி "என்று கத்த துவங்க பிரியா அவனது வாயில் கை வைத்து மூடினாள் .பிரியா"எரும காட்டெரியும் இல்ல ஒட்டெரியும் இல்ல நா தான் ."என்று கூறி அவனது வாயில் இருந்து கை எடுக்க


அர்ஜுனோ அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.அர்ஜுன்"உனக்கு எதுவும் ஆயிடுமோன்னு எவ்ளோ பயந்தேன் தெரியுமா பிரியா .என் உயிரு என் கிட்டயே இல்ல"என்று அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவள் அவனது தவிப்பையும் பயத்தையும் இந்த அணைப்பிலேயே உணர்ந்தாள் .


அவனது முதுகை ஆதரவாக வருடியவள் "அர்ஜுன் ஒன்னும் இல்ல எனக்கு ஒன்னும் ஆகலேல அப்பறோம் என் இந்த பயம்.15 என்கவுண்டர் பண்ண போலீஸ் officer  நீங்க இப்டி பலகீனமா இருக்கலாமா?"என்று வினவ 

அவனோ "இல்ல பிரியா உன் விஷயத்துல மட்டும் நா ரொம்ப பலகீனமா மாறிடுறேன். "என்று கூறி விட்டு பின் அவளை விட்டு விலகினான்.பின் மூவரும் தாங்கள் அரண்மனையில் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள .

கார்த்திக்"என்னது யாருக்கும் தெரியாம ஒருத்தர அடைச்சு வச்சுருக்காங்களா?அப்போ அவரை விசாரிச்சா எல்லாம் தெரிஞ்சுரும்ல"என்க ப்ரியாவும் அர்ஜுனும் ஆம் என்பது போல் தலை அசைத்தனர்.


பிரியா"அவரை இங்க இருந்து வெளியேத்தி அவர் கிட்ட விசாரிச்சோம்னா எல்லா புதிருக்குமான விடை கிடைச்சுடும் "என்று கூற 


அர்ஜுன்"ஆனா அது அவ்ளோ ஈசி இல்ல .இங்க அரண்மனைல ஒவ்வொரு அங்குலத்துக்கும் ஒரு வீரன் காவலுக்கு இருக்கான் .அவுங்கள மீறி அவரை இங்க இருந்து வெளியேத்துறது அவ்ளோ சுலபம் இல்ல."என்று கூற 

மந்திர தேசம்(முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang