paguthi 16

2.3K 162 108
                                    

அவினாஷ் கையில் இருந்த பந்து பட்டு ஓவியம் பலகையை விட்டு வெளியில் வந்தது .சத்தம் கேட்டு அங்கு வந்த பிரியா ஓவியம் பலகையோடு வேறொரு பொருளும் இருப்பதைக் கண்டு அவ்விடம் நோக்கி செல்கிறாள்.

அந்த ஓவியத்தின் பலகையிலிருந்து ஒரு சின்ன பெட்டிபோன்று ஒரு பொருள் தரையில் விழுந்து இருந்தது.அதை பிரியா கையில் எடுத்து பார்க்கின்றாள்.அது ஒரு சிறிய மரப் பெட்டி.அப்பெட்டி எங்கும் பல வேலைப்படுகள் இருந்தது அதன் மேல்பகுதியில் ஒரு கல் பதிக்கப்பட்டு இருந்தது.

அது என்ன என்று பார்த்தவள் அதைத் திறக்க முற்பட அவளால் அதை திறக்க முடியவில்லை .பின் அவளது தோளில் யாரோ கை வைப்பதைப் போல் இருக்க அவள் திரும்பி பார்க்க அங்கு அவினாஷ் "சாரி அக்கா" என்று கூறினான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு .

அவனிடம் விளையாட நினைத்தவள் "இல்ல அவி நீ எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்க சாரி மட்டும் கேட்டா எப்படி உன்ன விடுறது??" என்று கேட்க 

அவனோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு "அப்போ பனிஷ்மென்ட் குடு"என்று கூற

 அவளோ "சரி எனக்கு ஒரு கிஸ் குடு அதான் உனக்கு பனிஷ்மென்ட்" என்று சிரித்த முகத்துடன் கூற அவனோ முகம் மலர்ந்து அவளது இரு கன்னத்திலும் முத்தமிட்டுவிட்டு ஓடினான்.

பின் அவள் அந்த பெட்டியுடன் வெளி வர அர்ஜுனோ "தப்பு பண்ணா மேடம் இப்டி தான் பனிஷ்மென்ட் குடுப்பீங்களா??"என்று விஷமமாக கேட்க அ

வளோ அவன் முகபாவனையை கவினிக்காமல் "எனக்கு புடிச்சவுங்க சின்ன தப்பு பண்ணா அப்டி தான் ஏன் கேக்குறீங்க?" என்று கேட்க அ

வனோ "அப்போ நா இப்போ ஒரு தப்பு பண்ணவா??"(தப்பா யோசிக்க கூடாது முழுசா dialoguah கேக்கணும்) என்று அவளது சடையை பிடித்து இழுக்க போக அவள் அஸ்கு புஸ்கு என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

பின் அப்பெட்டியை தன்அறையின் ஜன்னலருகே வைத்தவள் நிவேதா மித்ராவுடன் சுமங்களிப் பூஜைக்கு சென்றால்.அங்கு கோவிலில் திருமணமான பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் அனைவரும் விளக்கு பூஜையை ஆரம்பித்தனர்.அர்ஜுன் ப்ரியாவை நேரடியாக நின்று ரசித்துக் கொண்டிருக்க கார்திக்கோ காவலர்களிடம் பேசி விட்டு அப்பொழுது தான் உள்ளே வந்தான்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now