1 திருமணம்

11.1K 166 14
                                    

1 திருமணம்

புது மணப்பெண்ணை போல ஒளிர்ந்து கொண்டிருந்தது, 'அன்பு இல்லம்'. ஆனால் அதன் புது மருமகள் ஐஸ்வர்யாவை விட ஒன்றும் பெரிதாய் ஒளிர்ந்து விடவில்லை. ஃபேஷன் உலகின் முடிசூடா மன்னன் வசீகரனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும், இன்று திருமணம் இனிதாக முடிந்திருந்தது. இன்று அவர்களின் முதலிரவு. ஐஸ்வர்யா அவனுடைய அறையில் தான் இருக்கிறாள். இல்லை, இல்லை.... அவர்களுடைய அறையில் இருக்கிறாள். நல்ல நேரத்திற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்ததால், வசீகரன் வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டு இருக்கிறான்.

கட்டுக்கடங்காத ஆவலுடன், அந்த பத்து நிமிடங்களை கழிக்க முடியாமல் அமர்ந்திருந்தான் வசீகரன். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றாலும், நாம் இதை அரேஞ்டு மேரேஜ் என்று சொல்வதற்கில்லை. ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்திலேயே நமது ஹீரோ கிளீன் போல்ட் ஆனான். அவளைப் பார்த்த அந்த நொடியில் இருந்தே, அவன், அவளை, காதலிக்க தொடங்கி விட்டான். அதனால், இதை நாம் ஹாஃப் லவ் மேரேஜ் என்று கூறலாம். அந்த பத்து நிமிடத்தை கடக்க முடியாமல் காத்திருந்தவனுக்கு, அவன் முதன்முதலில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்த நாளில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

*ஒன்றரை மாதத்திற்கு முன்*

வசீகரன்...! பெயருக்கு ஏற்றார் போல் உண்மையிலேயே வசீகரமானவன். பார்த்த மாத்திரத்திலேயே, எந்தப் பெண்ணும் தனது மனதை பறி கொடுக்கக் கூடிய அளவிற்கு கவர்ச்சி நிறைந்தவன், அழகானவன். ஆனால், வசீகரனை வசீகரிக்கும் அளவிற்கு, எந்த ஒரு பெண்ணும் அவன் கண்களில் தென்படவே இல்லை.

தன் பெற்றோர், தனக்காக பார்த்த அத்தனை பெண்களையும் வேண்டாம் என்று நிராகரித்தான் வசீகரன். அது, அவன் பெற்றோரை கலக்கம் கொள்ளச் செய்தது. நாளடைவில், பெண்களின் புகைப்படங்களை பார்ப்பதைக் கூட அவன் விரும்பவில்லை. தனது வியாபார விஸ்த்தரிப்பில் அவனது முழு கவனமும் இருந்ததால், திருமணம் பற்றிய எண்ணமே அவனுக்கு ஏற்படவில்லை.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now