2 கணவனின் எதிர்பார்ப்பு

4.5K 151 5
                                    

2 கணவனின் எதிர்பார்ப்பு

மறுநாள் காலை

ஐஸ்வர்யா தனது கண்களை கசக்கியவாறு தூக்கத்திலிருந்து எழுந்து, அமர்ந்தாள். அவளை பதற்றம் முழுமையாக ஆட்கொண்டது, அவளுடைய கணவன், எதிரில் அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த போது...! அவளுக்கு என்ன செய்வது என்பதே புரியவில்லை. கட்டிலிலிருந்து சட்டென்று இறங்கியவள்,

"குட்மார்னிங்" என்று வசீகரன் உரைக்க சற்றே நின்று,

"குட்மார்னிங்" என்றாள் தயக்கத்துடன்.

"நல்ல தூக்கம் போல இருக்கு?" என்று அவன் எகத்தாளமாய் கேட்ட போது, அவன், நேற்று இரவு அவள் உறங்கிப் போனதை இடித்துக் கூறுவதை அவளால் உணர முடிந்தது. அவனுக்கு பதில் ஏதும் கூறாமல், அவளுடைய பையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, குளியலறை நோக்கி விரைந்தாள் ஐஸ்வர்யா. அவள் அப்படி ஓடியதைப் பார்த்து, உதடு கடித்து சிரித்தான் வசீகரன்.

குளித்து முடித்து, ஐஸ்வர்யா மெதுவாக குளியலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள். அவர்களுடைய அறை காலியாக இருக்கவே, நீண்ட நிம்மதிப் பெருமூச்சுடன் மெல்ல வெளியே வந்தாள். திடீரென, யாரோ அவள் கை பற்றி இழுக்க, அடுத்த நிமிடம் அவள் வசீகரனின் கரங்களுக்குள் பிடிபட்டிருந்தாள். இந்த எதிர்பாராத, அவனது திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தவள், அவன் கரங்களுக்குள் இருந்து வெளிவர முயற்சித்தாள். அந்த சிறிய பெண்ணின், மருண்ட விழிகளும், நடுங்கும் இதழ்களும், இறுக்க மூடிய விரல்களும், வசீகரனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. இவையெல்லாம் அவனுக்கு ஒரு மயக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா அவனை தள்ளி விட முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. பாவம்... அந்தப் பெண்ணால், அவனின் இரும்புக் கரங்களை அசைக்கக் கூட முடியவில்லை. அவளது கன்னங்களை நோக்கி குனிந்தவன், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, அவனின் இறுகிய பிடி லேசாக தளர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதவளாய், அவனை பிடித்து தள்ளி விட்டு, கதவை திறக்க ஓடினாள் ஐஸ்வர்யா. சுவற்றில் மோதி, அவன் அப்படியே கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now