25 பார்வை ஒன்றே போதுமே

2.6K 128 6
                                    

25 பார்வை ஒன்றே போதுமே

அன்பு இல்லம்

வசீகரனும் ஐஸ்வர்யாவும், அன்பு இல்லம் வந்து சேர்ந்தார்கள். ரத்னா சமையலறையில் வேலையாக இருந்தார். வசீகரன், லண்டனுக்கு செல்வதால், அவனுக்கு பிடித்த உணவை ரத்னா தயாரித்து கொண்டிருப்பதாக ஐஸ்வர்யா நினைத்தாள். சமையலறையிலிருந்து வெளியே வந்த ரத்னா அவர்களைப் பார்த்து,

"நீங்க வந்தாச்சா?" என்றார்.

"ஆமாம்மா. எனக்கு பேக்கிங் வேலை இருக்கு."

"ஐஸ்வர்யா, நீ அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?"

"சரிங்க, ஆன்ட்டி" என்று கூறிவிட்டு தங்கள் அறையை நோக்கி சென்றாள் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவை பார்த்தவுடனேயே, ரத்னாவுக்கு புரிந்தது, அவள் நன்றாக இல்லை என்பது. அவர் 'என்ன ஆயிற்று?' என்று பார்வையின் மூலமாக வசீகரனை கேட்க, அவன் 'ஏதும் இல்லை' என்பது போல தோள்களை குலுக்கினான். அந்த நேரம் அங்கு வந்த ஒரு இளைஞன், ஒரு பேக் செய்யப்பட்ட டப்பாவை வசீகரனிடம் கொடுத்தான்.

"விஷால் சார் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னார்" என்றான்.

"ஓ.. இதுவும் வந்தாச்சா?" என்றார் ரத்னா.

"ஆமாம்மா"

"சரி, உன் ரூமுக்கு போ. நேரம் ஓடிக்கிட்டிருக்கு. இருக்கிற கொஞ்சம் நேரத்தை, அவகிட்ட எந்த வம்பும் செய்யாம, அவ கூட யூஸ்ஃபுல்லா செலவு பண்ணு."

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் வசீகரன்.

"வம்பு செய்யறது யூஸ்ஃபுல்லா இருக்காதுன்னு நினைக்கிறீர்களா? என்றான்.

"அது யூஸ்ஃபுல்லா இல்லயாங்கிறது, அவ எடுக்க போற முடிவுல தான் தெரியும்"

"ஆமாம்" என்று சிரித்த படி தலையசைத்தான் வசகரன். விஷால் கொடுத்தனுப்பி இருந்த டப்பாவின் மீது, அதே சிரிப்புடன் ஏதோ எழுதிவிட்டு, அவன் அறைக்கு வந்த போது, ஐஸ்வர்யா அவனுடைய பொருள்களை எல்லாம் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவன் எடுத்து வந்திருந்த டப்பாவை அவளை நோக்கி நீட்ட, கேள்வி பொதிந்த பார்வை ஒன்று பார்த்தாள்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now