9 குறும்புகாரன்

3K 136 14
                                    

9

வசீகரன், அவனுடைய அறையினுள் நுழைந்த பொழுது, ஐஸ்வர்யா, அவளுடைய கல்லூரி சான்றிதழ்களை எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டிருந்தாள். அதை மறுநாள் அலுவலகம் எடுத்து செல்ல தீர்மானித்திருந்தாள். அதை தன்னுடைய கைப்பையில் எடுத்து வைத்துவிட்டு, கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டாள். வசீகரனும் கட்டிலின் அடுத்த பாகத்தை ஆக்கிரமித்தான்.

"நீ ஆஃபீசுக்கு வருவேன்னு எனக்கு தெரியும்" என்றான்.

"என்னை பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்றாள் சலனமற்ற முகத்துடன்.

"என்னை பத்தி உனக்கு கூடத் தான் எதுவும் தெரியாது"

"ரொம்ப சீக்கிரமே தெரிஞ்சிக்குவேன்"

"பரவாயில்லையே, புருஷனை பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்க போலிருக்கு." என்றான் கிண்டலாக.

அதே கிண்டலுடன்,

"ஆமாம்... ரொம்ப ஆர்வமா இருக்கேன்" என்றாள் ஐஸ்வர்யா.

அவனுக்கு எதிர்புறமாக திரும்பி படுத்துக்கொண்டாள், மேலும் அவனுடன் பேச்சை வளர்க்க விரும்பாமல். ஆனால் அவளை அப்படியெல்லாம் விட்டு விடுவானா என்ன வசீகரன்?

"நீ எப்பவுமே இப்படித் தான் தூங்குவியா?" என்றான்.

"எப்படி?" என்றாள் அவனை நோக்கி திரும்பிய வண்ணம்.

"யாரையாவது கட்டி பிடிச்சிக்கிட்டு.... காலைத் தூக்கி மேலே போட்டுகிட்டு... இப்படித் தான் தூங்குவியா? சரி, உங்க அம்மா வீட்ல யாரை கட்டி புடிச்சிகிட்டு தூங்குவ? அந்த பிங்க் கலர் டெடிபியரயா? போட்டோவுல நீ அதை கட்டிப்பிடிச்சிகிட்டு இருந்ததை நான் பார்த்தேன். நல்ல காலம், உனக்கு இப்படியாவது ஒரு பழக்கம் இருந்தது. வரப்போற என்னோட அடுத்த ஆறு மாசத்துல, உன்னோட அந்த பழக்கம் தான் என்ன சந்தோஷமாக வைக்க போகுது" என்றான் தன்னைத்தானே அணைத்துக் கொண்டு.

ஐஸ்வர்யாவிற்கு தர்மசங்கடமாகி போனது. அப்படியென்றால், முந்தைய தினம் அவள் தான் அவனை கட்டிப்பிடித்தாளா? நகம் கடித்தபடி பதட்டத்துடன், மறுபடியும் அவனுக்கு எதிர் திசையில் திரும்பி படுத்துக் கொண்டாள். ஏனென்றால், அவளுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தது உண்மை தான்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now