28 எதார்த்தம்

2.6K 116 5
                                    

28 எதார்த்தம்

தன் மென்மையான முகத்தை, மெல்லிய துண்டால் துடைத்துக்கொண்டு, குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் ஐஸ்வர்யா. வெளியே வந்தவள், வசீகரனை நினைத்து பார்த்தாள். வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அவனுடைய கண்கள்... ஏக்கம் நிறைந்த பார்வை... அவளை எப்பொழுதும் கட்டி அணைக்க துடிக்கும் கரங்கள்... முடிவில்லாத அவனுடைய உரையாடல்கள்...

அவன் இல்லாத இந்த வீடு, அழகாகவே தோன்றவில்லை.

படுத்தால் உறக்கம் வரவில்லை. ஆனால், விழித்திருக்கவும் பிடிக்கவில்லை. வசீகரனின் மந்திரத்தால் கட்டுண்டது போல அவள் காணப்பட்டாள். அவள் அவனுடைய காதலில் உருகி வழிந்து கொண்டிருந்தாள். ஆனால், அது பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது... என்ன ஒரு பரிதாபமான நிலை... அவள் சதா வசீகரனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் எங்கு சென்றாலும், அவளுடன் யார் இருந்தாலும், அவள் நினைப்பு என்னவோ வசீகரனின் மீதே இருந்தது. சிலசமயங்களில் பிரமை பிடித்தவள் போல் காணப்பட்டாள். அவளை சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவளுக்கு புரியாமல் இருந்தது.

ஏஆர்வி கம்பெனி

தனது அறையில் அமர்ந்து மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவள் மிகவும் பிஸியாக காணப்பட்டாள்... நேரத்தை பிடித்து தள்ளுவதில் பிஸியாக இருந்தாள். வசீகரன், லண்டனுக்கு சென்று இருபது நாள் ஆகி விட்டிருந்தது. அவன் திரும்பி வர இன்னும் பத்து நாட்களே மீதம் இருந்தன. அவளுக்கு நேரத்தை கடத்துவதற்குள், போதும் போதும் என்றாகிவிடுகிறது. தன்னை ஏதோ ஒரு வேலையில் ஆழ்த்தி கொண்டு, ஒவ்வொரு நிமிடத்தையும் அவள் கழித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய ஃபோன் ஒலிப்பது கூட அவளுக்கு கேட்கவில்லை. அது ஒலித்து அடங்கியது. ஐந்து நிமிடம் கழித்து, விஷால் அவளுடைய அறைக்கு வந்தான்.

"மேடம், நீங்க ஏன் வசீகரன் சார் ஃபோனை அட்டென்ட் பண்ணல?" என்றான்.

"என்ன??? எப்போ???" என்று அதிர்ச்சியாக கேட்டாள் ஐஸ்வர்யா.

"அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி"

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now