37 இறுதி பகுதி

5.3K 187 76
                                    

37 இறுதி பகுதி

ஏஆர்வி கம்பனி

ஸ்கெட்ச் ரூமில், மும்முரமாக டிசைன் செய்து கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. திடீரென, மழை பெய்ய தொடங்கவே, வேலையை அப்படியே நிறுத்தி விட்டு அதை ரசிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது, அவளுக்கு வசீகரனிடமிருந்து ஃபோன் வந்தது. அவனுக்கு அவள் பதிலளிக்கும் முன்,

"ஐஷு, நேரா பார்க்கிங் லாட்டுக்கு வா. நான் உனக்காக காத்திருக்கேன்" என கூறிவிட்டு ஃபோனை துண்டித்தான்.

என்னவோ, ஏதோ என்று எண்ணி, பதற்றத்துடன் பார்க்கிங் லாட்டை நோக்கி விரைந்தாள், ஐஸ்வர்யா. வசீகரன் தயாராக காரில் அமர்ந்திருப்பதை பார்த்து சட்டென்று ஏறி அமர்ந்தாள். இன்ஜினுக்கு உயிரூட்டி அங்கிருந்து கிளம்பினான் வசீகரன்.

"வசி, ஏதாவது பிரச்சினையா? எல்லாரும் நல்லா இருக்காங்கல்ல?"

அவன் சாவகாசமாக வாகனத்தை செலுத்துவதை பார்த்து, எதுவும் பெரிய பிரச்சினை இல்லை என்பதை புரிந்துகொண்டாள் ஐஸ்வர்யா.

"என்ன விளையாட்டு இது? நான் எவ்வளவு முக்கியமான வேலையை செஞ்சுகிட்டு இருந்தேன் தெரியுமா?" என தன் கைப்பையால் அவனை ஒரு அடி போட்டாள்.

"தினமும், நம்ம அதைத் தானே செஞ்சுகிட்டு இருக்கோம்...?" என்றான் சாதரணமாக.

"நம்ம எங்க போறோம்?"

"சஸ்பென்ஸ்"

"என்னை கடத்திக்கிட்டு போறீங்களா?"

"ஆமாம், செகண்ட் ஹனிமூன் போலாம்னு இருக்கேன்"

ஐஸ்வர்யாவின் கைப்பையால், மேலும் ஒரு அடி வாங்கினான்.

அவர்களுடைய கார், வேறு ஏதோ ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.

"நாம எங்க போறோம்னு சொல்ல மாட்டீங்களா? இந்த கொட்ற மழைல எங்க கூட்டிட்டு போறீங்க?"

காரை நிறுத்திவிட்டு, கொட்டும் மழையில் வசீகரன் இறங்கினான். அவள் பக்கக் கதவைத் திறந்து, அவளையும் வெளியே இழுத்தான். அவனை வசைபாட, வாயை திறக்க முயன்ற ஐஸ்வர்யா, அப்படியே நின்றாள், எதிரில் இருந்த ஐஸ் கிரீம் பார்லரை பார்த்து. அவளைத் தன்னுடன் உள்ளே அழைத்துச் சென்று, அவளுக்கு பிடித்த, சாக்லேட் கோன் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தான். அந்த ஐஸ் கிரீமை, அவன் அவளை நோக்கி நீட்டிய போது தான் கவனித்தான், அவள் அவனையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை.

🎉 You've finished reading அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) 🎉
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now