11 ஒரே ஒருத்தி

2.9K 137 6
                                    

11 ஒரே ஒருத்தி

மாலை

வசீகரனுடனும், அரவிந்தனுடனும், அன்பு நிலையம் வந்தடைந்தாள் ஐஸ்வர்யா. தனது அறைக்கு செல்லும் முன்பாக, ரத்னாவை ஆரத்தழுவி விட்டு சென்றாள். அது ரத்னாவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. வசீகரனோ, தனது கண்களை சுழற்றியபடி சிரித்தான்.

உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்கு வந்து, ரத்னாவிற்கு உதவ ஐஸ்வர்யா எத்தனித்த போது, ரத்னா அவளை தடுத்து நிறுத்திவிட்டார். இருந்தாலும், அங்கிருந்து செல்ல மனமில்லாமல், அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள் ஐஸ்வர்யா. அவள் அலுவலகம் பற்றி பேச நினைத்த போது, ரத்னா பேச்சை மாற்றிவிட்டார். அவர் அலுவலகத்தில் நடந்தவற்றைப் பற்றி வசீகரனுக்கு முன்பாக பேச நினைத்தார். அது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்பதில் அவருக்கு அதிக நம்பிக்கை.

இரவு உணவு வேலை

அனைவரும் உணவருந்த அமர்ந்த பின் ரத்னா, பேச்சைத் துவங்கினார்.

"உன்னுடைய ஆஃபீஸ் அனுபவம் எப்படி இருந்தது, மா?"

"ரொம்ப நல்லா இருந்தது, ஆன்ட்டி" என்றாள் ஐஸ்வர்யா.

"ஆமாம் மா. உங்க மருமகளுக்கு இன்னிக்கு ஆஃபீஸ் ரொம்ப சுவாரசியமா இருந்திருக்கும்" என்று அவளை சீண்டினான் வசீகரன்.

முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல்,

"ஆமாம். ரொம்ப சுவாரசியமா இருந்தது" என்றாள் ஐஸ்வர்யா.

"முக்கியமா டீ ப்ரேக்குக்கு அப்புறம்... சரி தானே?" என்றான் நமுட்டு சிரிப்புடன்.

"அதைத் தவிர மத்த எல்லாம்" என்றாள் அவனை முறைத்தபடி ஐஸ்வர்யா.

"அப்படியா? கவலைப்படாத, நாளைக்கு அதை விட சுவாரஸ்யமா இருக்கும்" என்று அவன் கூறியதைக் கேட்டு ஐஸ்வர்யாவின் விழிகள் விரிந்தன.

"நீங்க எதை பத்தி பேசுறீங்கன்னு சொல்லிட்டு பேசினா, நாங்களும் அந்த சுவாரஸ்யத்தை தெரிஞ்சுக்குவோம்" என்றார் ரத்னா.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now