12 வசீகரனை பற்றி...

2.8K 135 14
                                    

12 வசீகரனை பற்றி...

ஏஆர்வி கம்பெனி, மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த புகைப்பட ஒளிப்பதிவு நாள் வந்தது. அது அவர்கள் கம்பெனியின் அடுத்த மிகப் பெரிய ப்ராஜெக்ட்டுக்கான புகைப்பட ஒளிப்பதிவு.

அந்த புகைப்பட பதிவை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பு, ஐஸ்வர்யாவிடம் விடப்பட்டிருந்தது. அந்த புகைப்பட பதிவிற்கு தேவையான அத்தனை உடைகளையும், ஐஸ்வர்யாவே வடிவமைத்திருந்தாள்.

காலை முதற்கொண்டே அவள் மிகவும் பதட்டமாக காணப்பட்டாள். அவள் முகத்திலும் அவள் நடவடிக்கையிலும் அது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

அவளுடைய நிலை வசீகரனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அவனைத் தவிர வேறு யாரால் அவளை வெகு அழகாக புரிந்து கொள்ள முடியும்? அவன் அவளை உற்சாகப்படுத்த எண்ணினான். அதை செய்வதற்காக அவனுடைய மேனேஜர் விஷாலை தொடர்பு கொண்டான்.

விஷால் ஐஸ்வர்யாவின் அறைக்கு சென்றான்.

"குட் மார்னிங், மேடம்" என்றான்.

அவள் சொன்ன "குட்மார்னிங்" காட்டிக்கொடுத்தது, அவள் எவ்வளவு நடுக்கமாக இருந்தாள் என்பதை.

"இது உங்களோட ஃபோட்டோ செஷன். நீங்க, இப்ப அங்க இருக்கணும். மாடல் சோனா எப்ப வேணாலும் இங்க வந்துடுவாங்க. அவங்க எல்லாத்துலயும் ரொம்ப பர்ட்டிக்குளரா இருப்பாங்க. நீங்க அதை கொஞ்சம் கவனிச்சுகங்க" என்றான்.

"சோனாவா? யாரது?" என்றாள்.

"அவங்க நம்பர் ஒன் மாடல் ஆஃப் இண்டியா. ரொம்ப சீக்கிரம் கோபம் வந்துரும். அவங்கள கொஞ்சம் பார்த்து ஹேண்டில் பண்ணுங்க" என்றான்.

ஐஸ்வர்யாவின் பதட்டம் மேலும் அதிகரித்தது. அங்கிருந்து நேரடியாக கிரீன் ரூமிற்கு சென்றவள், அவள் வடிவமைத்த உடைகளுக்கு பொருத்தமான மேட்சிங் ஃபேன்சி ஜுவல்லரி, மற்றும் ஒப்பனைகளை தேர்ந்தெடுத்த பின், நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தாள்.

சற்று நேரத்தில், தன் உதவியாளர்களுடன் புயலைப் போல் உள்ளே நுழைந்தாள் மாடல் சோனா. அவர்கள் தான், அவளுக்கு இட மற்றும் வல கரங்கள். அவளுக்கு அனைத்தையும் செய்து விடுவது அவர்களின் வேலை.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now