16 நிலைப்பாடு

2.8K 129 9
                                    

16 நிலைப்பாடு

ஐஸ்வர்யாவுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாத வண்ணம் வசீகரன், இளவரசன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் மனைவியைப் பிரிந்து அவனால் இருக்க முடியாது என்பது, ஒரு காரணமாக இருந்தாலும், ஒரு விதத்தில் அவன் ஐஸ்வர்யாவின் மனதிலிருந்த திட்டத்தை கணித்துவிட்டான் என்பதே உண்மை.

மிகப்பெரிய ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன், தனது நிலையிலிருந்து கீழிறங்கி, தன் மாமியார் வீட்டிற்கு வந்து கொட்டம் அடிப்பான் என்பதை, ஐஸ்வர்யா கனவிலும் நினைக்கவில்லை. ஒருபுறம் அது அவளுக்கு எரிச்சலை தந்தாலும், மறுபுறம் அது அவள் உள்ளார்ந்த இதயத்திலிருந்து எழுந்தது என்று சொல்வதற்கு இல்லை. வசீகரன் ஒரு ஒப்பீலி. அவனை யாருடனும் ஒப்பிட முடியாது. ஆனால், ஐஸ்வர்யா அதை அவ்வளவு சுலபத்தில் ஒப்புகொண்டு விடுவாளா என்ன? அப்படியே ஒப்புக் கொண்டாலும், அது அவ்வளவு சுலபத்தில் நடைபெறப் போகும் விஷயமில்லை.

"நீங்க இங்க வரப் போறீங்கன்னு எதுக்காக என்கிட்ட சொல்லல?"

"என்னமோ, நம்ம ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் எதையுமே மறைக்காத மாதிரியும், எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிறவங்க மாதிரியும் கேட்கிற? உங்க அம்மா வீட்டுக்கு போக போறதை நினைச்சு நீ ரொம்ப சந்தோஷமா இருந்த. அந்த கனவை குலைக்க வேண்டாம்னு தான் நான் உண்மைய சொல்லல"

"இப்ப மட்டும் நீங்க என்ன பண்ணி இருக்கீங்க, அதையே தானே?"

"இருக்கலாம். யாருக்கு தெரியும், ஒருவேளை நான் உன்கிட்ட, முன்னாடியே இதை பத்தி சொல்லியிருந்தா, என்னை தடுத்து நிறுத்த, நீ என்னென்ன பிளான் பண்ணி இருப்பியோ? எனக்கு தெரியாது, நீ எவ்வளவு அழுத்தக்காரின்னு?"

"நான் அழுத்த காரியா? நீங்க மட்டும் என்ன ரொம்ப யோக்கியமா? எவ்வளவு தத்ரூபமாக நடிச்சிங்க, என்னமோ, நீங்க எதுவுமே செய்யப் போறது இல்ல அப்படிங்கற மாதிரி?"

"நீ மட்டும் என்ன சும்மாவா? எங்க அம்மாவை நடிச்சி தானே உன் பக்கம் இழுத்துக்கிட்ட? அவங்க ஒரு அப்பாவி, உன்னுடைய நடிப்பை பார்த்து நம்பிட்டாங்க. ஆனா நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட, உன்னோட கோ-ஸ்டார் வசீகரன் அப்படிங்கறத"

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now