3 பிறந்த வீடு

4.1K 153 7
                                    

3 பிறந்த வீடு

வசீகரனும், ஐஸ்வர்யாவும் காரில் புறப்பட்டார்கள். ஏதும் பேசாமல் அமைதி காத்து கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவர்கள் தவறான வழியில் பயணப் பட்டுக் கொண்டிருப்பது ஐஸ்வர்யாவிற்கு புரிந்தது.

"நீங்க எங்க போறீங்க?" என்றாள் பதட்டமாக.

"உன்னை எங்க கூட்டிட்டு போக சொன்னாங்களோ, அங்க தான் போயிகிட்டிருக்கேன்" என்றான் சாதாரணமாக.

"ஆனா, எங்க அம்மா வீட்டுக்கு போற வழி இது இல்லையே"

"அப்படியா? ஆனா, நான் இந்த பக்கமா தான் உங்க அம்மா வீட்டுக்கு வருவேன்"

"நீங்க சுத்திக்கிட்டு போறீங்க"

"ஓஹோ" முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் காரைத் தொடர்ந்து ஓட்டினான் வசீகரன்.

"எங்க வீட்டுக்கு போறதுக்கு சரியான வழி கூட உங்களுக்கு தெரியாதா?" என்றாள் வெடுக்கென்று.

காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி, அவனது சீட் பெல்ட்டை நீக்கிவிட்ட பின், அவளை பார்த்தபடி திரும்பி அமர்ந்தான்.

"என்னோட வைஃப் இவ்வளவெல்லாம் பேசுவான்னு எனக்கு தெரியாது. ரொம்ப சந்தோஷம், அட்லீஸ்ட் இப்போதாவது நீ ஏதோ பேசின"

ஐஸ்வர்யா ஸ்தம்பித்து நின்றாள்.

"நீ எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியா, மாப்பிள்ளை முதலிரவு ரூமுக்குள்ள வரதுக்கு முன்னாடி, கல்யாண பொண்ணு தூங்கிப் போனதை? நேத்து ராத்திரி, எனக்கு எவ்வளவு நீளமானதா இருந்துதுன்னு உனக்கு தெரியுமா? இல்ல, நான் எப்ப தூங்கினேன்னாவது உனக்கு தெரியுமா? உங்க அம்மா வீட்டுக்கு போறதுக்கு நான் எடுத்துக்கிட்ட எக்ஸ்ட்ரா தெர்டி மினிட்ஸ்காக நீ இவ்வளவு வருத்தப்படுற. இந்த அக்கறை, நேத்து தூங்குறதுக்கு முன்னாடி உனக்கு எங்க போச்சி?"
அதைக் கேட்ட போது அவனுடைய குரலில் ஒரு குழைவு தென்பட்டது.

"இன்னிக்கு, அப்படி நடக்காதுன்னு நான் நினைக்கிறேன்."

சற்றே பேச்சை நிறுத்தியவன்,

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now