22 கேள்வியும் பதிலும்

2.6K 130 7
                                    

22 கேள்வியும் பதிலும்

அந்த நாள் முழுவதும், நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அனைத்து பொறுப்புகளையும் அவள் தன் கையில் எடுத்துக் கொண்டு விட்டதால், குறிப்பிட்ட நாளுக்குள், அனைத்தையும் முடித்து வைக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது. அந்த நாள் ஐஸ்வர்யாவை தனக்காக எடுத்துக் கொண்டுவிட்டது. அவர்களுடைய அடுத்த நிகழ்ச்சி நல்லபடியாக வர வேண்டும் என்பதற்காக அவள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாள். மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்த நேரத்திலும், அவளால் வேலையை முடித்து கொண்டு கிளம்ப முடியவில்லை.

விஷால் அவளுடைய அறைக்கு வந்தான்.

"மேடம், ரொம்ப நேரமாயிடுச்சு. மீதி வேலையை நாளைக்கு பாத்துக்கலாம்" என்றான்.

"இல்ல விஷால். இந்த வேலையை என்னால பாதியில் நிறுத்த முடியாது. நீங்க எனக்காக காத்திருக்க வேண்டாம். நீங்க கிளம்புங்க. நான் வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன்"

"ஆமாம். நீ கிளம்பு. நான் தான் இங்க இருக்கேன்னே" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தார்கள். அங்கு வசீகரன் நின்றிருந்தான்.

"தேங்க்யூ, சார்"

வசீகரனுக்கு நன்றி கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றான் விஷால்.

தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு, வசீகரனை பார்த்தாள் ஐஸ்வர்யா.

"நீ கவலை படவேண்டாம், உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ உன் வேலையை பாரு. நான் என்னோட ரூம்ல இருக்கேன். ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு."

ஐஸ்வர்யா நிம்மதிப் பெருமூச்சு விடுவதை பார்த்து, சிரித்துக் கொண்டு தன் அறையை நோக்கி சென்றான் வசீகரன்.

ஐஸ்வர்யா, தான் ஆரம்பித்த வேலையை, நிம்மதியாக தொடர்ந்தாள். வசீகரன் உடன் இருக்கிறான் என்ற நினைப்பு, அவளுக்கு அந்த பாதுகாப்பு உணர்வை கொடுத்தது. வசீகரன் தான் அவளுக்கு பாதுகாப்பு என்பதை, அவள் வெளிப்படையாக சொல்லாவிட்டால் என்ன? அவளுடைய மனம் ஒத்துக் கொள்ளாமலா போய்விடும்? நேரம் சென்று கொண்டிருப்பதை கூட கவனிக்கவில்லை அவள், ரத்னா அனுப்பியிருந்த இரவு உணவை, வசீகரன் எடுத்துக்கொண்டு, அவள் அறையில் நுழையும் வரை.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now