8 தீர்வு
இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்த ரத்னாவை பார்த்து சிரித்தார் அரவிந்தன். ரத்னாவிற்கு ஏற்பட்டதைப் போல, தன் மகனின் வாழ்க்கையில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் அவருக்கு இல்லை அல்லவா...?
"உனக்கு வாக்கிங் போகணும்னா சொல்லு, நான் உன்ன கூட்டிட்டு போறேன். எதுக்காக வீட்டுக்குள்ளேயே இப்படி நடந்துகிட்டு இருக்க? " என்று கேலி செய்தார்.
ரத்னா அவர் அருகில் சென்று அமர்ந்த போது, அவர் ஏதோ தவிப்பில் இருப்பதை அவர் உணர்ந்தார்.
"ஏதாவது பிரச்சினையா? ஏதாவது சொல்லணும் நினைக்கிறியா?"
"எனக்கு எல்லாமே தப்பா தோணுது"
"தெளிவா பேசு"
மூன்று நாட்களாக, ரத்னா கவனித்து வந்த வசீகரன் மற்றும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை, அவர் அரவிந்தனுடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய தவிப்பு அரவிந்தனையும் தொற்றிக்கொண்டது.
"ஐஸ்வர்யாவை தனியா விட்டுட்டு, வசீகரன் ஆஃபிஸிலேயே தங்குறது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல. இதுக்கு ஏதாவது செஞ்சாகணும்"
அவரது மனதில் எழுந்த யோசனையை அரவிந்தனிடம் கூறினார்.
"இதுக்கு வசீ ஒத்துக்குவான்னு நீ நினைக்கிறாயா?" என்றார்.
"அவன் நிச்சயம் ஒத்துக்குவான். எனக்கு என் புள்ளையை பத்தி நல்லாவே தெரியும். அவன் ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு எவ்வளவு ஆசையா இருந்தான்னு எனக்கு தெரியாதா? அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. அது நிச்சயமா வசீகரனால இல்லைங்கிறது எனக்கு தெரியும்"
"சரி என்ன செய்யணும்? நானும் கூட இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும் எனக்கு" என்றார் அரவிந்தன்.
இரவு உணவிற்காக அனைவரும் ஒன்று கூடிய போது, பேச்சை துவங்கும் படி அரவிந்தனுக்கு சைகை செய்தார் ரத்னா.
"வசி, ராமநாதனோட போஸ்டுக்கு யாரைப் போடுறதுன்னு ஏதாவது முடிவு பண்ணியிருக்கியா?" என பேச்சை துவங்கினார்...
YOU ARE READING
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
Romanceஇது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.