24 இடைவெளி
ஐஸ்வர்யாவின் அறைக்கு வந்த வசீகரன், அவளை வேலையை முடித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அவள் எதிரில் அமர்ந்து கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையில் சொல்லப் போனால், அவனுக்கு அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. "அவளை வேலையை முடித்துக் கொள்" என்று சொன்னால், அவள் அவ்வளவு சீக்கிரத்தில் அதை செய்ய மாட்டாள். அவளை சீக்கிரமாக கிளப்ப வேண்டும் என்றால், இது தான் ஒரே வழி. இனி ஐஸ்வர்யா தானாகவே, அனைத்து வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு, கிளம்பி விடுவாள். இவன் இப்படி அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தால், அவளுக்கு நிச்சயம் வேலை செய்யத் தோன்றாது என்பது அவனுக்குத் தெரியும்.
தனது கம்ப்யூட்டரை லாக் அவுட் செய்து விட்டு எழுந்தாள் ஐஸ்வர்யா. சிரித்தபடி அவளுடன் கிளம்பினான் வசீகரன். அவர்களுடைய கார், அவளுடைய அம்மா வீட்டை நோக்கி செல்வதை பார்த்த போது, ஐஸ்வர்யாவிற்கு குழப்பமாக இருந்தது.
"நாம, எங்க அம்மா வீட்டுக்கு போறோமா?" என்றாள்.
"எஸ்"
"ஆனா ஏன்? நான் தான் உங்ககிட்ட எனக்கு அங்க போறதுல விருப்பம் இல்லன்னு சொன்னேனே..."
"அவசியம்ங்கறதால தான் போறோம்"
"ஏதாவது பிரச்சினையா? எல்லாரும் நல்லா இருக்காங்க இல்ல?"
"ஏன் எப்போதும் தப்பாவே நினைக்கிற? நல்லது நடக்கவே நடக்காதா?"
ஐஸ்வர்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
"சரி, சொல்லுங்க என்ன விஷயம்?"
"ரொம்ப ஆர்வமா இருக்க போல இருக்கு... நீயே இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுக்குவ"
"உங்களுக்கு என்னை காக்க வைக்கிறதுல ரொம்ப சந்தோஷம். அப்படித் தானே?"
"என்ன செய்றது? என்னோட சேர்க்கை அந்த மாதிரி... உன் கூட சேர்ந்ததிலிருந்து, நானும் உன்னை மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சிட்டேன். நீயும் தானே என்னை எல்லாத்துக்கும் காக்க வச்சிக்கிட்டு இருக்க? இல்லன்னு சொல்லு பாக்கலாம்?"
YOU ARE READING
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
Romanceஇது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.