30 எதிர்பார்ப்பு

2.7K 118 7
                                    

30 எதிர்பார்ப்பு

மாமியாரும், மருமகளும், ஒரே மனநிலையில் அதிர்ச்சியோடு நின்றார்கள், வசீகரனின் வசீகரத்தை கெடுத்து, புதர் என வளர்ந்திருந்த தாடியை பார்த்து. வாழ்க்கையில் அனைத்தையும் தொலைத்து விட்ட சன்யாசி போல, காடென வளர்ந்த தாடி, மீசையும், ஒழுங்காக வெட்டப்படாத தலைமுடியும், ஆளே உருமாறி போய் நின்றிருந்தான் வசீகரன்.

தான் அணிந்திருந்த ரேபான் கண்ணாடியை கழற்றி விட்டு, அவர்களைப் பார்த்து சிரித்தான்.

"என்ன கண்றாவி கோலம் டா இது?"

இந்தக் கோலம் ஏன் என்பது ரத்னாவிற்கு புரிந்திருந்தாலும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"ரிலாக்ஸ்ம்மா"

"உன்னை இந்த பிச்சைக்கார கோலத்தில பார்த்துட்டு, எப்படிடா நான் ரிலாக்சா இருக்கிறது?"

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான் வசீகரன்.

"பிச்சைக்கார கோலமா? நிஜமாவா?"

"இதெல்லாம் உனக்கு கிண்டலா இருக்கா?" கூறிவிட்டு, அவனுக்கு ஆலம் சுற்றாமலேயே உள்ளே சென்றார் ரத்னா. அவன் முகத்தில் கழிக்கப்பட வேண்டிய திருஷ்டி எதுவும் இருப்பதாக அவருக்கு தோன்றாததால்.

"நிஜமாவே இதெல்லாம் கிண்டல் இல்லம்மா. என்னை பெத்த அம்மாவுக்கே என்னை பாக்க பிடிக்கலைன்னா, அப்ப, வேற யாருமே என்னை பாக்க விரும்பமாட்டாங்க தானே?" என்றான் சிரித்தபடி.

அவனை அதிர்ச்சியுடன் பார்த்த ஐஸ்வர்யாவால், அவனுடைய நிஜ உருவத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் கண்கள் சட்டென கலங்கியது.

தன் மனதில் அவனைப் பற்றி இருக்கும் எண்ணத்தை மாற்றுவதற்காக தான் இந்த *அழுக்கு அவதாரம்* என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. அது அவளுக்கு மனதை உறுத்தியது.

தன் கையில் வைத்திருந்த ஆல தட்டை வசீகரனினை மூன்று சுற்று சுற்றிவிட்டு, அவன் நெற்றியில் திலகமிட்டாள். அவளது கலங்கிய கண்களை பார்த்த வசீகரனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. குறைந்தபட்சம், அவள் மனதில் ஏதோ உணர்கிறாளே...

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now